கல்வி

தமிழில் கேள்வித்தாள் தயாரிக்க முடியாத அரசுப் பணியாளர் தேர்வாணையம் ?

Share

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசுத் துறைகளில் உள்ள பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என்று அறிவித்திருப்பது அவமானகரமானதாகும் .

தமிழில் கேள்வித்தாள் தயாரிக்கப்படாததை காரணமாக கூறியிருப்பது ஒழுங்கு நடவடிக்கை  எடுக்கத்  தக்க தவறுதல். ஆங்கிலத்தில் தீர்வு நடக்கும் என்றால் அதையே தமிழில் மொழிமாற்றம் செய்ய என்ன பிரச்னை? இதை செய்ய தவறிய அதிகாரி மீது என்ன நடவடிக்கை? இது தவறுதலா அல்லது திட்டமிட்ட சதியா?

தமிழ்நாட்டில் தமிழில் போட்டித் தேர்வுகளை நடத்த முடியாது என்று கூறுவது அவமானமில்லையா?

இதை மிகவும் சாதரணமாக கூற தேர்வாணையம் தயங்கவில்லை.

ஏன் சில வாரங்கள் கழித்து தமிழில் கேள்வித்தாள் தயாரித்து தேர்வு நடத்தக் கூடாது?

தேர்வாணையம் தவறை திருத்திக்கொள்ளாவிட்டால் போராட்டம் அறிவித்திருக்கிற மருத்துவர் ராமதாஸ் பாராட்டுக்குரியவர்.

தமிழக அரசில் ஒளிந்திருக்கும் இந்த தவறுக்கு காரணம் ஆன கறுப்பாடுகள் களைஎடுக்கப்படவேண்டும் !!

This website uses cookies.