மொழி

பாராளுமன்றத்தில் பொளந்து கட்டிய திருமாவளவன் ?!

Share

தமிழ்நாடு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தமிழில் பிரமாணம் செய்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.

திருமாவளவன் தனது முதல்  பேச்சை தமிழில் பேசி பாராட்டுதல்களை பெற்றார்.    பாராட்டு தமிழில் பேசியதற்காக மட்டுமல்ல. காவிரிப் பிரச்னை, தண்ணீர் பற்றாக்குறை, இலங்கையை நட்பு நாடு என்று பாராட்டுவது, இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு குற்றங்கள் போன்று தமிழர்களின் மனத்தில் நிறைந்திருந்த குமுறல்களை வார்த்தைகளால் கொட்டினார்.

சபாநாயகர் இது ரொம்ப சென்சிடிவ் மேட்டர் என்று எச்சரித்த போதும் இடைவிடாமல் தனது கருத்தை  பதிவு செய்தார்.

ஒரு கட்டத்தில் தமிழர்களின் உணர்வுகளை நீங்கள் புறக்கணித்தால் நாங்கள் இந்தியர்கள் அல்ல என்று சொல்லும் நிலைக்கு ஆளாக்கி விடாதீர்கள் என்று  பேசியபோது பாஜக உறுப்பினர்கள் பெருத்த ஆட்சேபனைகளை எழுப்பினார்கள்.

இதனால்தான் தான் சிதம்பரம் தொகுதி தேர்தல் முடிவுகள் தாமதப்படுத்தப் பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் தமிழ் ஊடகங்கள் திருமாவின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்காதது ஏன் என்ற கேள்வியும்  எழுகிறது.

தொடர்ந்து திருமா தமிழிலேயே பாராளுமன்றத்தில் பேசவேண்டும்.

அவர் மட்டுமல்ல அனைத்து தமிழ் உறுப்பினர்களும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக கலந்துபேச வேண்டும் அல்லது தமிழில் மட்டம் பேச வேண்டும். மொழிபெயர்ப்பு வசதி இருக்கும்போது எல்லாரும் அவரவர் மொழியில் கேட்டுக் கொள்ளுவார்கள்.

மொழிபெயர்ப்பு வசதி இருப்பதால் தமிழில் பேசுவதால் எந்த குறைபாடும் வரப்போவதில்லை.

திருமா தமிழில் பேசிய அளவு ஆங்கிலத்தில் உணர்ச்சி பூர்ப்வமாக பேசியிருக்க முடியாது.

பிரதமர் மோடி டி20 மாநாட்டில் இந்தியில் பேசுகிறார். பிறநாட்டு தலைவர்களுடன் இந்தியில் பேசுகிறார். அந்த உரைகள் மொழி பெயர்த்து தரப் படுவதால் எந்த தகவல் பரிமாற்ற பிரச்னையும் ஏற்படுவது இல்லை.

அதே போல் எல்லா மாநில உறுப்பினர்களும் அவரவர் தாய் மொழியில் பேசினால் எந்த தவறும் இல்லை.

தமிழ்நாடு வழிகாட்டி எல்லாரும் அவரவர் தாய்மொழியில் பேசினால் நல்லதுதானே?

திருமாவளவன் தமிழர்களின் பெருமிதம்!!

This website uses cookies.