மொழி

சென்னை போலிஸ் ரசீதில் இந்தி புகுந்தது?

Share

சென்னை போலிஸ் ரசீதில் இந்தி புகுந்தது?

அமித் ஷா இந்தியாவின் மொழி இந்தி என்று  என்று கூறினாரோ அப்போதே தெரிந்து விட்டது.

இனி எல்லா துறைகளிலும் இந்தி புகுந்துவிடும் என்று.

அச்சப்பட்டதைப்போலவே நடந்து வருகிறது.

சென்னை போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்து அளிக்கப்படும் ரசீதுகளில் இதுவரை ஆங்கிலம் மட்டுமே இருந்து வந்தது. இப்போது இந்தி புகுத்தப்பட்டு இந்தியும் ஆங்கிலமும் கொண்ட ரசீதுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

கேட்டால் இவைகளை தேசிய தகவல் மையம் வடிவமைப்பதால் எங்களால் தடுக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள்.

இந்தியை எல்லாவகையிலும் புகுத்துவதும் எதிர்ப்பு கிளம்பினால் ஏதாவது விளக்கம் சொல்லி முயற்சியை வேறு வகையில் தொடர்வதும் பாஜக அரசின் மொழிவெறி தொடர் கதையாகி வருகிறது.

தமிழ்நாட்டில் தரப்படும் ரசீதுகளை கூடவா மத்திய அரசு வடிவமைக்க வேண்டும்?

கண்டும் காணமல் இருக்கும் படி தமிழக அரசை மத்திய அரசு கட்டுப் படுத்துகிறது என்றுதான் மக்கள் எண்ணுவார்கள்.

இதுபற்றி தமிழக அரசுதான் நடவடிக்கை எடுத்து  தமிழ்நாட்டில் நமது நலனை பாதுகாக்க வேண்டும். 

தொடர்ந்து வரும் இந்தித் தாக்குதல்கள் இனிமேலாவது தடுக்கும் வழிகளை ஆராய்ந்து அறிவாயுதம் ஏந்தி தடுக்க முனைவோம்.

ஆங்கிலத்தில் ரசீதுகள் இருக்கும்போது ஆங்கிலேயன் நம்மை ஆளுகிறான் என்ற உணர்வு வராது. ஏனென்றால் ஆங்கிலேயன் ஆட்சி இங்கே இல்லை.

உண்மையில் அவன் தந்த மொழிதான் இந்தியாவை இதுவரை ஒற்றுமையாக கட்டுக்குள் வைத்திருக்கிறது.

ஆனால் இந்தியைப் பார்க்கும்போது இந்திக்காரன் நம்மை ஆளுகிறான் என்ற உணர்வு வருமா வராதா? ஏனென்றால் இந்தி மொழி பேசுபவர்கள் நான்கு மாநிலத்தில் இருக்கிறார்கள். ஏன் அவர்கள் மொழி என் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிர்வாகத்திற்கு பயன் படுத்தப்பட வேண்டும்?

தமிழக அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

This website uses cookies.