மொழி

தமிழை ஆட்சி மொழி ஆக்குவாரா மோடி?! மு க ஸ்டாலின் கேள்வி?!

Share

தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குங்கள் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சமீப காலமாக பிரதமர் மோடி தமிழின் தொன்மைத்தன்மை குறித்து வானளாவ புகழ்ந்து வருகிறார்.

தமிழர்களும் அக மகிழ்ந்து ஆகா நம்முடைய பிரதமர் போலாகுமா என்று புளகாங்கிதம் அடைகிறார்கள்.

உதட்டளவில் பாராட்டா உள்ளொன்று வைத்து பாராட்டா என்பதைக்கூட அறியாதவர்களா தமிழர்கள்?

உள்ளபடியே பிரதமர் தமிழ் உலகின் மிகத் தொன்மை வாய்ந்த மொழி என்று ஒப்புக் கொள்ளும் நிலையில் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழி  ஆக்குவதில் என்ன தடை? செய்வாரா பிரதமர். ?

முதலில் இந்தியாவின் 22 மொழிகளை ஆட்சி மொழி ஆக்கட்டும்.

மொழிப் பிரச்னையே வராது.

தான் பிறந்த மண்ணான இந்தியாவைத் தவிர பிறநாடுகள் பலவற்றில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகாரம் பெற்று விளங்குவதையும் ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார். 

தான் பிறந்த இந்தியாவில் வலுவிழந்து சென்ற பல நாடுகளில் கோலோச்சும் புத்த மதத்தைப் போல.

அமித் ஷா முன்பு சொன்னதை இப்போது சுப்பிரமணிய சாமி உரத்து சொல்லி வருகிறார். இந்தியாவில் ஒரு மொழிதான் பேச வேண்டுமாம். நீதி மன்ற மொழி சமஸ்கிரிதமாக இருக்க வேண்டுமாம். இன்னும் பா ஜ க வின் உயர் பொறுப்பில் அவரை வைத்துக் கொண்டிருக்கிறீர்களே ஏன் இந்த இரட்டை வேடம்?

 இந்தியை திணிக்க மாட்டோம் என்று உறுதி கூறினால் போதாது அதற்கு சட்ட வடிவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உங்களை நம்ப முடியும். 

                              செய்வீர்களா மோடி?

This website uses cookies.