கல்வி

டி என் பி எஸ் சி குரூப் 2 தேர்வில் தமிழ்ப் பாடம் அகற்றம் ??!!

Share

தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வில் முதல் நிலை தேர்வில் மொழித்தாளுக்குப் பதிலாக பொதுஅறிவு கேள்விகள் சேர்க்கப் பட்டிருக்கின்றன.

ஆங்கிலமும் தமிழும் இருந்ததால் தமிழே தெரியாமல் ஆங்கிலத்தில் எழுதி தேர்ச்சி பெறும் நிலை இருந்ததால் அந்த முறை நீக்கப்பட்டு உள்ளதாக ஆணைய செயலாளர் விளக்கம் தருகிறார்.

தமிழ் தெரியாமல் அரசு வேலைக்கு செல்ல முடியாது என்றும் அவர் கூறுகிறார். அப்படியானால் ஏன் மொழித் தேர்வை தமிழில் மட்டுமே நடத்தக் கூடாது.?

விளக்கம் பல சந்தேகங்களை எழுப்பிவுள்ளது.

6500 பணியிடங்களுக்கு 15 லட்சம் பேர் தேர்வு எழுதும் நிலைதான் இன்று இருக்கிறது.

இதில் தமிழ் தேர்வை தவிர்த்து பணிக்கு செல்ல முடியும் என்ற நிலை வராமல் தடுக்க வேண்டிய கடமை  தேர்வானையத்துக்கு இருக்கிறது.

ஆணையம் தந்து முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும்.

This website uses cookies.