Connect with us

சபரிமலையில் பெண்களுக்குத் தடை நீக்கி உச்சநீதிமன்றம் சவுக்கடி தருமா?

இந்திய அரசியல்

சபரிமலையில் பெண்களுக்குத் தடை நீக்கி உச்சநீதிமன்றம் சவுக்கடி தருமா?

10  வயதுக்கு மேல்    50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு சபரிமலையில் அனுமதி கிடையாது.

எத்தனையோ தடைகளை பார்ப்பனீயம் ஏற்படுத்தி இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக போராடி இந்த சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக மூட நம்பிக்கைகளை அகற்றி வந்துள்ளது.

உடன் கட்டை ஏறுதல் முதற்கொண்டு தீண்டாமை முதல் நூற்றுக் கணக்கான தீமைகள் மத நம்பிக்கையின் பேரால்தான் அமுல் படுத்தப் பட்டு வந்தன.

பட்டியலிட்டால் மாளாது.

ஐயப்பன் பிரமச்சாரி.   அதனால் பெண்கள் அருகில் சென்று வழிபட கூடாதா?

அவர் இறைவன் என்றால் எல்லாருக்கும் தானே இறைவன்.      ஆண்களுக்கு மட்டும்தான் இறைவனா?

மாதவிலக்கு பெண்களுக்கு இயற்கை தந்த வரம்.   அதில் குற்றமென்ன?

இன்று பெண்கள் செய்யாத வேலை ஒன்றுமில்லை.   எல்லாம் மாத விலக்கை பொருட்படுத்தாமல் பணி செய்வதால்தான் சாத்தியம்.

இறைவன் படைப்பில் குற்றம் காண முயற்சித்தால் இறைவனையே குற்றம் சுமத்துகிறாய் ?

பெண்கள்தான் எல்லா காரியங்களையும் ஏற்பாடு செய்து ஆண்களை வழி அனுப்புகிறார்கள்.   அவர்களின் பங்களிப்பு இல்லாமல் யாரும் சபரிமலை செல்வதில்லை.   யாத்திரை பங்கப் பட்டுவிட்டதா?

சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டு எல்லாரையும் அரவணைக்க வேண்டிய கோவில் நிர்வாகிகள் கண்ணை மூடிக் கொண்டு முடிவுகளை எடுக்கிறார்கள்.

கேரள அரசு தடையை நீக்குவதை ஆதரிக்கிறது.    தேவஸ்வோம் போர்டு எதிர்க்கிறது.

அரசியல்  சட்டம் தந்திருக்கும் சமத்துவ உரிமையை எந்த மத சம்பிரதாயமும் பறிக்க முடியாது.

அதைத்தான் உச்ச நீதி மன்றம் நிலைநாட்டும் என்று நாட்டு மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

தீபக் மிஸ்ரா, நாரிமன், கன்வில்கர், சந்திர சூட் , இந்து மல்ஹோத்ரா கொண்ட அரசியல் சாசன பெஞ்சு விரைவில் தீர்ப்பு வழங்க இருக்கிறது.

முஸ்லிம், கிறிஸ்தவ நம்பிக்கைகளில் நீதி மன்றம் தலை இடுமா என்று கேட்கிறார்கள். தலையிட வேண்டும்.   சமத்துவத்தை நிலை நாட்ட வேண்டும்.

முதலில் சமத்துவம் நிலவட்டும்.  பிறகு நம்பிக்கை  மட்டும் போதும் மதம் வேண்டாம் என்ற நிலைக்கு மக்கள் வருவார்கள்.  .

நல்ல தீர்ப்பு வரட்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in இந்திய அரசியல்

To Top