கல்வி

தமிழை விட சமஸ்க்ரிதம் தொன்மையனதாம்? +2 பாட புத்தகத்தில் தமிழக அரசு பிதற்றல்?

Share

தமிழக அரசு வெளியிட்ட +2 ஆங்கில பாட புத்தகத்தில் தமிழ் ஏசு பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்றும் சமஸ்கிருதம் ஏசு பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது எனவும் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

உயர் தனிச் செம்மொழியான தமிழ் கால வரையறை செய்ய முடியாத அளவு தொன்மையானது. இலக்கியம், இலக்கணம் பேச்சு வழக்கு போன்ற அனைத்து வரையறைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் தமிழ்தான் தொன்மையானது என்பதை யாரும் ஒப்புக்கொள்வார்கள்.

அதிமுக ஆட்சியில் சங்கப் பரிவாரங்கள் எதை விரும்புகிறார்களோ அதை செய்வதற்கு  இவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் தமிழின் தொன்மையை விட்டுக் கொடுக்கும் அளவு செல்வார்கள் ஏறு எதிர்பார்க்கவில்லை. இந்த தவறு சரி செயப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தாலும் எத்தனை தவறுகளைத்தான் சரி செய்வார்கள்.

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழி இந்தி என்று குறிப்பிடப்பட்டு இருகிறது.

அதிமுக அரசின் உள்ளே இருக்கும் கருப்பு ஆடுகள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா? அல்லது  கிடப்பில் போட்டு எஜமான விசுவாசத்தை காட்ட்ப்போகிரார்களா?

உண்மையைத் தானே சொல்லி இருக்கிறோம் என்று பாஜக அரசுக்கு சாமரம் வசப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாடப் புத்தகங்களிலேயே தவறுகள் கொட்டிக் கிடந்தால் மாணவர்கள் எப்படி நிறைய  மதிப்பெண்கள் வாங்க முடியும்.

துரோகம் ஆரம்பம்??

This website uses cookies.