Connect with us

நெல் கொள்முதலில் மூட்டைக்கு ரூபாய் 30-40 லஞ்சம் ?! கேட்க நாதியில்லையே??!!

paddy-procurment

வேளாண்மை

நெல் கொள்முதலில் மூட்டைக்கு ரூபாய் 30-40 லஞ்சம் ?! கேட்க நாதியில்லையே??!!

நெல் கொள்முதலில் மூட்டைக்கு ரூபாய் 30-40 லஞ்சம் ?

விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து மத்திய அரசுக்கு ,  இந்திய உணவுக்கழகத்துக்கு கொடுக்கிறது தமிழக அரசு.

இந்த கொள்முதலில் பல ஆண்டுகளாக நிலவும் லஞ்சத்தை ஒழிக்கவே முடியவில்லை.

எத்தனை கண் துடைப்புகள். நேரடியாக பணம் கொடுத்தால் கமிஷன் எடுத்துக் கொண்டு விடுகிறார்கள் பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவோம் என்றார்கள். அது ஒரு வாரம் முதல் பத்து நாட்களுக்குள் வந்து  சேரும். பரவாயில்லை என்றால் கொள்முதல் செய்யும் போதே மூட்டைக்கு முப்பது ரூபாய் கொடுத்தால் தான் கொள்முதல் ஆகும் என்பதுதான் எதார்த்தம்.

மறுத்தால் நிலையத்தின் முன்னால் கொட்டி விட்டுப்  போங்கள் வரிசைப்படி வாருங்கள் என்பார்கள். மழை பெய்தால் அவ்வளவுதான். எப்போது காய வைத்து எப்போது விற்பது? திருட்டுப் போனாலும் பாதுகாப்பு இல்லை. நெல்லை தூற்ற வைத்து கொண்டு வரவேண்டும். அதற்கு தனியாக  செலவு செய்ய வேண்டும்.  தூற்ற என்று ஒரு  மிஷின் இருக்கிறது. அதில் 17 % க்கு மேல்  ஈரப்பதம் இருந்தால்  கொள்முதல் செய்ய  மாட்டார்கள்.  சாக்கு இல்லை என்று  கொள்முதல் செய்ய மாட்டார்கள்.

எப்போது சாக்கு வருவது எப்போது கொள்முதல் நடக்கும்?  வந்தாலும் ஒரு  நாளைக்கு அறுநூறு மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்ய மாட்டார்கள். தூற்றும் மெஷின் அத்தனை மூட்டைகளை தான் ஒரு நாளைக்கு தூற்றும். அதற்கு  மேல் வாங்கினால் தூற்றாமல் வாங்கினீர்கள் என்று அர்த்தம்  என்பதால் அதற்கு மேல் கொள்முதல் செய்ய மாட்டார்கள்.

இதெல்லாம் கட்டுப்பாடுகள் என்றால் அதையும் சந்தித்து விற்கப் போனால் ஏதாவது  புதிது புதிதாக கண்டுபிடித்து கொள்முதல் செய்யாமல் இருக்க காரணம் சொல்வார்கள்.

வேறு வழியில்லாமல் தான் அத்தனை விவசாயிகளும் மூட்டைக்கு முப்பது ரூபாய் கொடுத்து வருகிறார்கள். கணக்குப் பார்த்தால் பல கோடிகள்.  கேட்டால் அமைச்சர் முதல் கணக்கர் வரை பிரித்து போகிறது என்கிறார்கள்.  யார் கேட்பது இந்த அநியாயத்தை?

சில இடங்களில் துணிச்சல் கொண்ட ஓரிருவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்து சிலர் கைது செய்யப் படுவதும் நடக்கிறது. எத்தனை பேர் புகார் கொடுக்க முன்வருவார்கள்?

விவசாய சங்கங்கள் அரசியல்  கட்சிகள் பொதுநல அமைப்புகள் என்று எத்தனை இருந்தாலும் எவருக்கும் கட்டுப்படாமல் இந்த ஊழல் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் இருந்தாலும்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் இருக்கத்தானே செய்கிறது??!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in வேளாண்மை

To Top