பொழுதுபோக்கு

ரசிச்ச பாவத்துக்கு வெச்சு செய்றீங்களா ரஜினி, கமல்?

Share

இதுவரை நடிகர்கள் அரசியலில் செய்யாததை இப்போது  ரஜினியும் கமலும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மக்களை சோதிப்பது. ரொம்பத்தான் சோதிக்கிறார்கள்.!

விஜயகாந்த் வந்தார். திராவிட பெயரை கைவிட வில்லை. அரசியல் செய்து கொண்டிருக்கிறார். பத்தரை சதம் வரை சென்று இப்போது இரண்டு சதத்துக்கு வந்து விட்டார்.

உடல்நலமின்றி இருக்கும் அவரை தொந்தரவு செய்ய யாருக்கும் விருப்பம் இல்லை.    நல்ல மனிதர் என்ற பெயரோடு நீடிக்கிறார். அவரை வைத்து அவர் குடும்பம் அரசியல் செய்கிறது. போகட்டும்.

ஆனால் கமலும் ரஜினியும் செய்வது சகிக்க முடியவில்லை.

ரஜினியை இழுக்கப் பார்த்தார் கமல். ரஜினி மாட்டவில்லை. உள்ளாட்சி தேர்தலில் படம் பெயரை பயன்படுத்தினால் நடவடிக்கை என்று அறிவித்திருக்கிறார்.

இப்போதைக்கு தர்பார் வெளியாகி இன்னொரு படமும் பண்ணியபிறகு 2021 தேர்தல் வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் வந்தால் போதும் என்று நினைக்கிறாராம். அதுதான் மகா எரிச்சலை தருகிறது.

கமல் பலம் 3-72% தான் என்று தெரிந்து விட்டது. கொள்கையே சொல்லாமல் வாங்கிய இந்த வாக்கு எந்த வலுவுள்ள சுயேச்சைக்கும் கிடைக்கும். கமல் பார்ப்பனீயத்தின் பிரதிநிதி என்ற சந்தேகத்தை துடைக்க அவர் ஒருபோதும் முன்வரவில்லை. சும்மா தானும் ஒரு நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு நடைமுறையில் சனாதனிகளை கண்டிக்காத வரை யாரும் உங்களை நம்பப்போவதில்லை.

இந்த இரண்டு பேரும் தமிழர்களை எப்படி எடை போட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்தால்தான் கோபம் பல மடங்காகிறது.

இந்த இருவரையும் தமிழகம் நாற்பதாண்டுகளாக தலையில் தூக்கி கொண்டாடி இருக்கிறது. அந்த அன்பைக் காட்டியதற்குத்தான் இப்போது இருவரும் தமிழர்களை வெச்சு செய்கிறார்கள்.

நீதிக்கட்சியும் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் போற்றி வளர்த்த திராவிட சித்தாந்தத்தை ஒழித்துக் கட்ட புறப்பட்டிருக்கும் இந்த இருவரும் யாரை கொண்டாடப் போகிறார்கள் எந்த சித்தாந்தத்துக்கு வலு சேர்க்கப் போகிறார்கள் என்பது தெரியாமல் அதை அவர்களும் சொல்லாமல் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்களே அதை தமிழகம் அனுமதித்தால் தன் தலையில் தானே கொள்ளி வைத்துக் கொண்டது போல.

பேசாமல் ரஜினி இப்படியே சொல்லிக் கொண்டு காலத்தைக் கடத்தி விட்டால் தமிழர்களுக்கு ஒரு நிம்மதி.

யாரோ சொல்லிக் கொடுத்து இதுதான் சமயம் இவர்கள் தலையில் மிளகாய் அரைக்க என்று ரஜினி வந்து விட்டால் ரசித்தவர்கள் கையாலேயே வலியையும் அவர் ருசிக்க வேண்டி வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

This website uses cookies.