Connect with us

கச்சா எண்ணெய் வாங்கும் விலை பாதியாக குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை உயர யார் காரணம்?

petrol-dielsel

இந்திய அரசியல்

கச்சா எண்ணெய் வாங்கும் விலை பாதியாக குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை உயர யார் காரணம்?

2014 ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை 145 டாலர்
பெட்ரோல் விலை ரூபாய் 60
டீசல் ரூபாய் 45
பால் ரூபாய் 40
2018 ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை 70 டாலர்
பெட்ரோல் விலை ரூபாய் 80
டீசல் ரூபாய் 72
பால் ரூபாய் 52
ஏன் இப்படி நடக்கிறது? யார் காரணம்?
நமது மத்திய மாநில அரசுகள்தான் காரணம்.

இவர்கள் தங்கள் வருமானத்தை இழக்க மாட்டார்களாம் .
பொதுமக்கள் இந்த உயர்வை தாங்கிக் கொள்ள வேண்டுமாம்!
அதாவது மத்திய மாநில அரசுகள் தங்கள் வருவாயை
உயர்த்திக் கொண்டே போகிறார்கள்.
2014 ல் மத்திய மாநில அரசுகள் வசூலித்த வரிவிகிதத்தை
2018 ல் வசூலிக்கும் வரிவிகிதத்தோடு ஒப்பிட்டு பார்த்தால்
இந்த அநியாயம் விளங்கும்.
நான்கு அம்சங்கள் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கின்றன.
டீலர் விலை
மத்திய அரசின் கலால் வரி
டீலர் கமிஷன்
மாநில அரசின் வாட் வரி
இந்த நான்கும் சேர்ந்து விற்கும் விலையாக மாறுகிறது.

தற்போது மத்திய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூபாய் 21.48 வசூலிக்கிறது.
மத்திய அரசுக்கு மொத்த வரிவருவாயில் 23 % கலால் வரியில் கிடைக்கிறது.
மாநில அரசுகளுக்கு மொத்த வரிவருவாயில் வாட் மூலம்
சராசரியாக 10% முதல் 14 % வரை கிடைக்கிறது.
மாநில அரசுகள் தங்களுக்கு கிடைக்கும்
வாட் வரி வருவாய் குறைந்து விடும்
என்றுதான் ஜி எஸ் டி யை எதிர்க்கிறார்கள்
அதாவது இருவரும் தங்கள் வருவாயை குறைத்துக் கொள்ளமாட்டார்கள்
பொதுமக்கள் மீது வரியை அதிகரிக்க தயங்க மாட்டார்கள்.
சில மாநில அரசுகள் தங்கள் விகிதத்தை குறைத்துக் கொண்டு
நல்ல பெயர் வாங்கின.

அதெல்லாம் சரி மத்திய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூபாய் 34 வீதம் 15 நாடுகளுக்கும் டீசலுக்கு லிட்டருக்கு ரூபாய் 37 வீதம் 29 நாடுகளுக்கும்
ஏற்றுமதி செய்வது ஏன்? தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த இந்த செய்தி
அதிர்ச்சி அளிக்கிறதல்லவா ? லாபமே இல்லாமல் நல்ல பெயர் வாங்கவோ ஒப்பந்தம் காரணமோ வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க தயங்காத மத்திய அரசு
சொந்த நாட்டு மக்களுக்கு விலையை உயர்த்தி
விலைவாசி உயர காரணமாக இருக்கலாமா?
நியாயப் படுத்தவே முடியாத அக்கிரமங்கள் இவை??!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in இந்திய அரசியல்

To Top