Connect with us

மத சார்பற்ற, தனி நபர் உரிமையை மதிக்கும் நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றிருக்கின்றன- ஆய்வில் முடிவு!

religions-in-india

இந்திய அரசியல்

மத சார்பற்ற, தனி நபர் உரிமையை மதிக்கும் நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றிருக்கின்றன- ஆய்வில் முடிவு!

பிரிஸ்டல் பல்கலைக்கழகம் டேமியன் ரக் தலைமையில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.

பொருளாதார வளர்ச்சிக்கு எந்தெந்த அம்சங்கள் ஒரு நாட்டிற்கு உதவி இருக்கின்றன?

எல்லா நாடுகளின் மத நம்பிக்கைகள் அவற்றின் உள்நாட்டு மொத்த உற்பத்தி ஆகியவை அளவு கோள்களாக எடுத்துக் கொண்டு ஆராய்ந்தார்கள் .

மதத்திற்கும் வளத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தார்கள்.  ஒன்று தெரிந்தது.

ஆம்.  மிகவும் வறுமையில் உள்ள நாடுகள் தான் மிகவும் மதம் சார்ந்த நாடுகளாக இருக்கின்றன.

பொருளாதார வளம் மத சார்பின்மைக்கு இட்டு  செல்லவில்லை.   மாறாக மத சார்பின்மைதான் பொருளாதார வளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது .

அதே சமயம் வெறும் மத சார்பின்மை மட்டும் போதாது.

அதோடு கூட தனி நபர் உரிமைக்கு தரப்படும் மரியாதையும்  இணைந்து கொள்ள வேண்டும்.

எதனால் இது ஏற்பட்டது என்பதை அரிதியிட்டு கூற முடியாவிட்டாலும்  ஒன்றை உறுதியாக கூறுகிறார்கள். அதுதான் சமீப காலத்தில் ஏற்பட்ட மதசார்பின்மைக்கு பொருளாதார வளர்ச்சி மட்டுமே  காரணம் என்று கூறமுடியாது என்பதே.   வேறு பல காரணங்களும் இணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

அதே நேரத்தில் தனி நபர் சுதந்திரத்திற்கும் சகிப்புத் தன்மைக்கும் கொடுக்கப் படும் முக்கியத்துவம்தான் , மத சார்பின்மையை விட, பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருந்துள்ளது என்பது உண்மை.

சகிப்புத் தன்மைதான் சமுதாயத்தின் வெற்றிக்குத் துணை என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது.

மத தீவிர வாதிகள்தான் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in இந்திய அரசியல்

To Top