கல்வி

நீட் தேர்வு; பேண்டின் மெட்டல் ஜிப்பை கழற்ற சொன்ன கொடுமை?!

Share

நீட் தேர்வே கூடாது என்று போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் நீட் தேர்வர்களை மனதளவில் பாதிக்கச்செய்து அது தேர்வில் எதிரொலிக்கும் அளவு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மாணவர்களை மிரட்டி இருக்கிறது அதிகார வர்க்கம்.

தமிழகத்தில் 1,34,711 தேர்வர்கள் 188 மையங்களில் தேர்வு எழுதினர்.

தேர்வு விளம்பரங்களில் தேர்வர்களை ‘அபேட்சகர்கள்’ என்று குறிப்பிட்டு தங்களது சமஸ்கிருத வெறியை வெளிக்காட்டினர் அதிகார வர்க்கத்தினர். 

எந்த தேர்விலும் இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்ததில்லை.

சிசிடிவி காமிரா கண்காணிப்பாளர்கள் எல்லாம் இருக்கும்போது ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்.

மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா?

அறிவுக்கு பொருத்தமே இல்லாத கட்டுப்பாடுகள் இவர்களின் நோக்கம் என்ன என்பதை கேள்விக்குறியாக்குகிறது.

மெல்லிய அரைக்கை ஆடை, ஷூ கூடாது, செருப்பு மட்டும் அணியலாம், ஹை ஹில் ஷூ கூடாது, காதணி, மூக்குத்தி கூடாது, தலைவிரி கோலமாகத்தான் வரவேண்டும், துப்பட்டா கழுத்து சங்கிலி கூடாது என்ற கட்டுப்பாடுகள் தான்தோன்றித் தனமானவையாக தோன்றவில்லையா ?

இதைவிட கொடுமை எங்கும் எதிலும் சொல்லாத ஒரு நிபந்தனை-அதாவது பேண்டின் ஜிப் மெட்டலில் இருக்கக் கூடாது. ஒரு மாணவரை அவரது பேண்டின் ஜிப்பை அறுத்து உள்ளே அனுப்பி இருக்கிறார்கள். அந்த மாணவரது தந்தை வெளியில் வந்து இந்த நிபந்தனை எங்குமே சொல்லப்பட வில்லையே என்று புலம்பிக் கொண்டே சென்றிருக்கிறார். வேறு வழி?   

இந்த கொடுமை எத்தனை நாள் நீடிக்கும் என்ற கேள்விதான் எல்லார் மனதிலும்.

This website uses cookies.