கல்வி

குழந்தைகளின் மீது ‘ஜெய் ஹிந்தை’ திணிக்கும் குஜராத் அரசு?!

Share

‘ஜெய் ஹிந்தை’ திணிக்கும் குஜராத் அரசு

பள்ளிப் பிள்ளைகள் வருகைப்பதிவின் போது ‘ ஜெய் ஹிந்த் ‘அல்லது ‘ஜெய் பாரத்’ என்று சொல்ல வேண்டும் என்று குஜராத் அரசு சுற்றறிக்கை அனுப்பி இருப்பது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

மாணவர்களுக்கு நாட்டுப்பற்றை வளர்க்க எத்தனையோ வழிகள் உள்ளன. அவர்கள் வளர்ந்து உணர்ந்து வாழ வேண்டிய உணர்வு  நாட்டுப்பற்று. அதை இப்படி திணிப்பது எப்படி சரியாகும்.?     அதற்கு ஒரு வயது வேண்டாமா? புரிந்து கொள்ள வேண்டாமா?

கல்வியின் தரம் மட்டுமே அடிப்படைக் கல்வியின் தேவை. அதில் செலுத்த வேண்டிய கவனத்தை கட்டாயப் படுத்தி ஒரு முழக்கத்தை எழுப்பச் செய்வதன் மூலம் அரசு வேறு ஏதோ இலக்கை வைக்கிறது.

ஒருவகையில் பள்ளிக் குழந்தைகளின் சிறுவயதிலேயே தங்கள் அரசியல் சித்தாந்தத்திற்கு வலு சேர்க்கும் முயற்சி என்று கூட சொல்லலாம்.

ஏன் பிள்ளைகளுக்கு நாட்டுப்பற்றை சொல்லிக் கொடுப்பது தவறா என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை.  ஏனென்றால் ஜெய் ஹிந்த் முழக்கம் வேண்டாம் என்று யாருமே சொல்லவில்லை.   அதிக பட்சம் அவரவர் தம்தம் தாய் மொழியில் நாட்டை வாழ்த்தி முழக்கம் இடுவார்கள்.

  நான் இந்தியா வெல்க என்று முழக்கம் இடுவேன். அது தவறாகுமா? அல்லது அன்னை பாரதம் வாழ்க என்றோ அன்னை பாரதம் வெல்க என்றோ முழக்கம் இட்டால் அது தவறா? 

தேசிய கீதம் பாடுவது நடைமுறையில் இருக்கும் போது வேறு வகையிலும் பாஜக அரசு தனது நோக்கங்களுக்கு பள்ளிப்பிள்ளைகளை பயன்படுத்துவது தவறான விளைவுகளைத் தான் உருவாக்கும்.

தானாக சொல்ல வேண்டிய முழக்கத்தை கட்டாயப் படுத்தி வீணாக்கி விடாதீர்கள்.

This website uses cookies.