Connect with us

பசுத்தோலில் செய்த மிருதங்கத்தை பார்ப்பனர்கள் இனி வாசிக்க மாட்டார்களா?

tm-krishna

மதம்

பசுத்தோலில் செய்த மிருதங்கத்தை பார்ப்பனர்கள் இனி வாசிக்க மாட்டார்களா?

கர்நாடக இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா புகழ் பெற்றவர்.

பார்ப்பனரில் திறமையுடன் மனசாட்சியும் உள்ளவர்.

கர்நாடக சங்கீதத்தில் ஏசுவையும் ஏன் பாடக் கூடாது என்று கேட்டு பாடியவர். அதனால் எதிர்ப்புகளை சம்பாதித்தவர்.

அவர் எழுதிய செபஸ்டியன் அண்ட் சன்ஸ் என்ற புத்தகத்தை தனது அரங்கில் வெளியிட முதலில் அனுமதி அளித்த கலாஷேத்ரா என்ற அமைப்பு தனது அனுமதியை திரும்ப பெற்றுக்கொண்டது. காரணம் அந்த புத்தகம் மிருதங்கம் செய்யும் தலித் தொழிலாளிகளின் வாழ்க்கையை அலசுகிறதாம்.

மிருதங்கம் பசுத்தோலில் செய்யப்படுகிறது. அந்த பசுத்தோல் மிருதங்கத்தை உற்பத்தி செய்யும் தலித் குடும்பங்கள் எப்படி வாழ்கின்றன என்பதை ஆராய்ந்து புத்தகம் எழுதி இருக்கிறார் கிருஷ்ணா. அவர்கள் அந்த வாத்தியத்தை உற்பத்தி செய்யாவிட்டால் எங்கே புகழ்பெற்ற மிருதங்க கலைஞர்கள் உருவாகி இருப்பார்கள்?

சிலவற்றை உலகத்துக்கு வெளியே சொல்வதில் பார்ப்பனரில் பலருக்கு உடன்பாடு இருக்காது.

இத்தனைக்கும் அது மத்திய அரசின் உதவியில் நடக்கும் நிறுவனம். அதை ஆக்ரமித்துக் கொண்டு தங்கள் சாதி செல்வாக்கை காத்துக் கொள்கிறார்கள்.

மீண்டும் அதே தேதியில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்துவதாக அறிவித்திருக்கிறார் கிருஷ்ணா. தொல். திருமாவளவன் புத்தகத்தை வெளியிடுகிறார். அணி திரண்டு சென்று  வாழ்த்துவோம்.

நல்லவர்களுக்கு அளிக்கும் ஆதரவுதான் சூது மதியாளர்களையும் திருத்தும் என்ற நம்பிக்கை உண்மைதானே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in மதம்

To Top