கல்வி

வேதம் படித்து வேலை கிடைக்க நிதி ஒதுக்கும் மத்திய மனித வளத்துறை??!!

Share

பாஜக ஆட்சியில் மத்திய மனித வளத்துறை சம்ஸ்கிருத வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தி கூடுதல் நிதி ஒதுக்கி வருகிறது.

தனியார் வேத பாடசாலைகள் நடத்தி வந்தால் அவர்களுக்கு உதவும் பொருட்டு புது புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

அதில் ஒன்றுதான் தேசிய திறந்த வெளி பள்ளிக்கழகம் (National Institute for Open  Schooling) மூலமாக சமஸ்கிருதம் படிக்கவும் பின்னர் வேலை கிடைக்க தகுதி பெறவும் உதவுகிறது. இந்த வேத பாடம் என்பது புதிதாக புகுத்தப்பட்ட பாடத்திட்டம்.  இந்த பாட திட்டத்தின் படி சமஸ்கிருத இலக்கணம் வரலாறு இலக்கியம் மற்றும் ஆங்கிலம் கற்றுத் தரப்படுகிறது.

வேத பாடசாலகளில் படித்தவர்கள் வேத விற்பன்னர்களாகவும் பேராசிரியர்களாகவும் தான் ஆக முடியும். அவர்கள் இந்த பள்ளிக்கழக சான்றிதழ் பெற்றால் அவர்கள் எந்த சுயநிதி பல்கலை கழகங்களிலும் மற்றும் வேறு நிறுவனங்களிலும் வேலை  வாய்ப்புகளை பெற முடியும். ஆக சமஸ்க்ரிதம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க திட்டமிட்டு மத்திய அரசு இந்த புது புது திட்டங்களை அறிமுகப் படுத்தி வருகிறது.

இத்தகைய ஆதரவு இதர மொழிகளுக்கு கிடைக்குமா என்றால் நிச்சயமாக கிடையாது. தமிழ் மறை படிக்க நிதி ஒதுக்குமா??!!

நாடு முழுதும் இந்த திட்டத்தை 2016ல் பாஜக அரசு அறிமுகபடுத்தியபோது சுமார்  5000 சமஸ்கிருத மாணவர்கள் பயன்படுத்தி கொண்டார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் சுமார் 25 மாணவர்கள் பயனடைந்தார்கள்.

தமிழகத்தில் சுமார் 300 வேத பாடசாலைகள் தலா 40 மாணவர்களைக் கொண்டு இயங்கி வருகிறது என்றால் 1200 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாங்கிக் தரும் வேலையைத் தான் மத்திய மனித வளத்துறை திட்டமிட்டிருக்கிறது.

இதில் பயிற்றுவிப்பவர்கள் பயனாளிகள் எல்லாருமே பார்ப்பனர்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

அதுதான் பாஜக.

This website uses cookies.