Connect with us

ஜெயலலிதா அள்ளிவிடும் பொய் மூட்டையும் அவிழ்த்து வீசக் காத்திருக்கும் பண மூட்டையும்???!!!

jayalalitha

Latest News

ஜெயலலிதா அள்ளிவிடும் பொய் மூட்டையும் அவிழ்த்து வீசக் காத்திருக்கும் பண மூட்டையும்???!!!

எல்லாரும் பயந்தது போலவே கரூரில்   5.2.  கோடி பணமும், இரண்டு கோடி மதிப்புள்ள கொலுசுகள் இரண்டு கோடி மதிப்புள்ள சேலைகள், 12  பணம் என்னும் எந்திரங்கள், போலி ஆம்புலன்ஸ் வேன் ஆகியவை தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப் பட்டது.      குடோன் அன்புனாதன் என்ற   அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் நண்பருக்கு சொந்தமானது.

மறுநாள் சென்னையில் அ தி மு க பிரமுகர் விஜயகுமார் என்பவர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை இட்டு ஐந்து கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் உலா வந்தன.   சோதனையை ஒப்புப்கொண்ட  மாநில தேர்தல் அதிகாரி லக்கானி  விபரங்களை நாளை வெளியிடுவதாக கூறுகிறார்.

அன்புனாதன் குறித்து பல  திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன .  இவருக்கு ஹாங்காங் பக்கத்தில் சொந்தமாக தீவு ஒன்றே உள்ளதாகவும் அங்கே இவர் அமைச்சர்களோடு சென்று    நடிகைகளுடன்  உல்லாசம் அநுபவித்து  வருவதாகவும் ஒரு மாலைபத்திரிகை  செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பந்தப் பட்ட நபர் பணம் தன் சொந்தப் பணம் என்பார்.     ஜெயலலிதா  இதில் இதுவரை எந்தக்  கருத்தையும் சொல்லவில்லை.

பாராளுமன்றத் தேர்தலில் பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றார் ஜெயலலிதா என்பது தமிழ்நாட்டில் எல்லாருக்கும் தெரிந்த நிலையில் சட்ட ப் பூர்வமாக நிரூபிக்க இயலா சூழலில் அந்தக் குற்றம் அப்படியே கரைந்து விட்டதே???       சோற்றில் பூசணிக்கா யை  மறைக்க முடியும் என்று  நிரூபித்தவர் ஜெயலலிதா.

அவரது சாதனைகள் எல்லாம் சமூகம் எதை செய்யக் கூடாது என்பதற்கான சாட்சிகள்.     எதை செய்ய வேண்டும் என்பதற்கான சான்றுகள் அல்ல.

பிரசாரத்தில் சொல்லி வருவதெல்லாம் பொய் மூட்டைகள்.      சட்ட மன்றத்தில் சொல்லி எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச விட்டிருந்தால் அவர்கள் விளக்கம் அளித்திருப்பார்கள்.    அங்கே விவாதம் மறுத்துவிட்டு    இங்கே பிரசாரத்தில்  பேசினால் யார் மறுத்து உரைப்பது. ?

கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு கட்சிகள் ,அதிகாரிகள், அரசியல்வாதிகள் , தன் கட்சிக்காரர்கள் என  எல்லாரையும் விலைக்கு வாங்கி  தனக்கு எதிரான வாக்குகளை பிரிப்பது, பல எதிரிகளை அவர்களுக்குள்ளாகவே  மோத விடுவது மிஞ்சி இருப்பவர்களை விலைக்கு வாங்கி  விடுவது என்று பகாசுர பாணியில் திட்டமிட்டு தமிழக மக்களை மீண்டும் அடிமைப் படுத்திட துடித்து வருகிறார் ஜெயலலிதா.

இந்த தேர்தலும் நியாயமாக நடக்குமா என்ற சந்தேகம் வந்து விட்டது.

மக்கள்  சக்தி இந்த சதிகளை எல்லாம் முறியடித்து விடும் என்ற நம்பிக்கை ஒன்றே  சத்தியம்.

பார்க்கலாம் ???

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Latest News

To Top