Connect with us

பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டில் நெருக்கடி தரும் பாஜக அரசு?!

narendra-modi

சட்டம்

பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டில் நெருக்கடி தரும் பாஜக அரசு?!

வி பி சிங் கொண்டுவந்த பிற்பட்டோருக்கு 27 % இட ஒதுக்கீடு தான் எல்கே அத்வானி ராம ஜென்ம பூமி ரத யாத்திரையை தொடங்க காரணமாக இருந்தது என்று சொல்வார்கள்.

மண்டல் கமிஷன் அறிக்கையை செல்லாதது ஆக்க கமண்டலத்தை  எடுத்தார் அத்வானி என்று விமர்சித்தார்கள். இது வரலாறு.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிற்பட்டோர் இடஒதுக்கீட்டில் கைவைத்து அவர்களை கீழே தள்ள முயற்சிப்பது பாஜக வுக்கு பிடித்தமான விளையாட்டு.

அந்த முயற்சியில் பிற்பட்டோரில் க்ரீமி லேயர் என்ற பிரிவுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று ஒரு  வரையறை கொண்டு வந்தார்கள். ஆண்டுக்கு எட்டு லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால்  இட ஒதுக்கீடு கிடையாது. அதில் ஏனைய வருமானம் என்று இருந்ததை மாத வருவாயை யும் விவசாய வருவாயையும் இப்போது சேர்த்திருக்கிறார்கள். இதனால் கணிசமான பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டு சலுகைகளை பெற முடியாமல் போய்விடும் என்று பாஜக நம்புகிறது.

ஏற்கெனெவே பல நீதிமன்றங்கள் இது தொடர்பாக தீர்ப்புகள்  சொல்லி  இருந்தாலும் ஏதாவது செய்து பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கைவைப்பதை குறியாக கொண்டு செயல்படுகிறது பாஜக அரசு.

இதுவும் நீதி மன்றம் செல்லும் என்று நம்புவோமாக.

உயர்நீதி மன்ற உச்ச நீதி மன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு  செயல் படுத்தப் படுகிறதா என்றால்  இல்லையே? 

மத்திய பிரதேச உயர்நீதி மன்றத்தில் இதுவரை தாழ்த்தப் பட்டவர் ஒருவர் கூட நீதிபதியாக நியமிக்கப்  படவில்லை என்ற செய்தியை  ஒருவர் சொன்னார்.

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீதித்துறை செயல்படுவதை சந்தேகிக்காமல் எப்படி இருப்பது?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சட்டம்

To Top