Connect with us

இட ஒதுக்கீட்டை புறக்கணிக்கும் ஆசிரியர் நியமன வாரியம்! பாமக குற்றச்சாட்டு?

ramadoss

தமிழக அரசியல்

இட ஒதுக்கீட்டை புறக்கணிக்கும் ஆசிரியர் நியமன வாரியம்! பாமக குற்றச்சாட்டு?

இட ஒதுக்கீட்டு கொள்கையை அரசு அமைப்புகளே குழி தோண்டி புதைக்கின்றன என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினால் அது அரசியல். கூட்டணி கட்சியான பாமக  வே குற்றம் சாட்டினால் அது உண்மைதானே.

மருத்துவர் ராமதாஸ் இந்த முறைகேட்டை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமூக நீதிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் துரோகம் செய்கிறது என்பது அவரது குற்றச்சாட்டு.

அதிகாரத்தில் உள்ள செல்வாக்கு படைத்த முற்பட்டோர் செய்யும் ஆரோக்கியத் தனம இது.

வழக்கமாக செய்யும் முறைகேடு என்றாலும் எத்தனை முறை நீதிமன்றத்தின் கையால் குட்டு வாங்கினாலும் தங்கள் தவறுகளை அவர்கள் திருத்திக் கொள்வதே இல்லை.

பொதுப் பிரிவில் பிற்பட்ட மாணவர்கள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்  பட்டால் அவர்களை ஒதுக்கி விட்டுத்தான் 69% இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை தேர்ந்து எடுக்க வேண்டும். ஆனால் அவர்களையும் இட ஒதுக்கீட்டு பிரிவினராக கணக்கு காட்டி மோசடி செய்கிறார்கள்.

இந்த முறைகேட்டை செய்யும் அமைப்பு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எனவே இதை களைய வேண்டிய கடமை அதிமுக அரசுக்குத்தான் இருக்கிறது.

பாஜக கூட்டணியில் சேர்ந்ததால் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அதிமுக கரைந்து விட்டதா?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழக அரசியல்

To Top