Connect with us

காந்தியை இழிவுபடுத்தி கோட்சேயை பாராட்டிய பெண் ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்?!

gandhi-godse

இந்திய அரசியல்

காந்தியை இழிவுபடுத்தி கோட்சேயை பாராட்டிய பெண் ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்?!

மராட்டிய மாநில பெண் ஐஏஎஸ் அதிகாரி நிதி சவுத்திரி.

பாஜகவின் தலைவர்களும் இந்து மகா சபை தலைவர்களும் மகாத்மா காந்தியை இழிவுபடுத்தியது போதாது என்று இவரும் தனது த்விட்டார் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

‘மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாடப் படவுள்ளது. அவரது படத்தை ரூபாய் நோட்டில் இருந்து அகற்றுவதற்கு இதுதான் சரியான நேரம். அவரது சிலைகள் உலகம் முழுவதும் இருந்து அகற்றப் பட வேண்டும். அவரது பெயர் சூட்டப்பட்ட நிறுவனங்கள் சாலைகளுக்கு மறுபெயர் சூட்ட வேண்டும். இதுதான் நாம் அனைவரும் செய்யவேண்டிய முக்கிய கடமையாகும். 30.01.1948ல் கோட்சே செய்த செயலுக்காக (மகாத்மா காந்தி கொலை) அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’

இதைவிட கொடுமையாக ஒருவர் எழுத முடியுமா? அவர் எவ்வளவு அழுகிய மனம் கொண்டவராக இருந்தால் இப்படி எழுதியிருப்பார்.?

மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திரா அவுகத் போன்றவர்கள் அவரை பதவி நீக்கம் செய்ய வற்புறுத்தி  இருந்தனர்.

மாநிலத்தில் ஆளுவது பாஜக கூட்டணி ஆட்சி. எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.  அதிகபட்ச நடவடிக்கை இட மாற்றம். அதைத்தான் செய்தார்கள்.

கண்டனம் அதிகமானவுடன் தனது பதிவை நீக்கியவர் சொன்னது அதைவிட மோசம். நான் எனது மனதில் பட்ட கருத்தை தான் கூறியிருந்தேன். அது தவறாக உணரப்பட்டுள்ளது. நான் மகாத்மா காந்தி குறித்து அவதூறாக எதுவும் சொல்ல வில்லை என்று கூறியிருக்கிறார்.

பாஜக ஆட்சியில் காந்தி மீதான தாக்குதல் இன்னும் அதிகரிக்கும் என்றுதான்  தோன்றுகிறது.

சாத்வி பிரக்யா சிங்கின் கோட்சே தேசபக்தர் என்ற பேச்சைதான் மன்னிக்கப் போவதில்லை என்று பிரதமர் மோடி கூறியதெல்லாம் சும்மா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in இந்திய அரசியல்

To Top