Connect with us

ஊழல் ஆட்சி என்று சொன்னால் நாக்கை அறுப்பேன் ; அமைச்சர் துரைக்கண்ணு சொல்லிவிட்டு பின்வாங்கினார்??!!

தமிழக அரசியல்

ஊழல் ஆட்சி என்று சொன்னால் நாக்கை அறுப்பேன் ; அமைச்சர் துரைக்கண்ணு சொல்லிவிட்டு பின்வாங்கினார்??!!

நான்காம் தர பேச்சாளர்களை கேள்விப்பட்டிருக்கிறோம்

பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு

கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்து பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

சமீபத்திய உதாரணம் கருணாஸ்-சட்ட மன்ற உறுப்பினர்

முறைகேடாக பேசி  இப்போது சிறையில் இருக்கிறார்

எப்போது பிணையில் வருவாரோ அவருக்கே தெரியாது?

 

திடீரென்று ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கு  எதிராக

பொதுக்கூட்டங்களை அறிவித்தது

எதிர்க்கட்சி ஆளுங்கட்சிக்கு  எதிராகப் போராடலாம்

ஆளுங்கட்சி  போராடுவது தமிழ்நாட்டில்தான் .

அந்த அதிசயம் நடந்தது .   

அத்தகைய கூட்டம் ஒன்றில் பேசும் போது தஞ்சையில்

அமைச்சர் துரைக்கண்ணு பேசுகிறார். என்ன ஊழல் ஆட்சி ஊழல் ஆட்சி என்று சொல்லிகிட்டே இருக்கே ? இனிமே அப்படி பேசினா நாக்கை அறுத்துப்போடுவேன் “

இப்படி பேசுபவர்களை நாம் அமைச்சர்களாக கொண்டிருக்கிறோம்.

எப்படி உருப்படும் தமிழ்நாடு?

 

அமைச்சர் மீது என்ன நடவடிக்கை யார் எடுப்பார்கள்?

இவர்களுக்கு மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க

 என்ன தார்மீக உரிமை இருக்கும்?

ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, திண்டுக்கல்  சீனி வாசன்

வீரமணி ,   ஓ எஸ் மணியன்    விஜயபாஸ்கர் போன்ற

காமெடி அமைச்சர்கள் பட்டியலில்

இப்போது  சேர்ந்து கொண்டார்  துரைக்கண்ணு .

குறிப்பு; விமர்சனங்கள் வலுத்ததும் ‘ நாக்கு அழுகிவிடும் ‘  என்ற கிராமத்து

அடைமொழியை வாய் தவறி ‘ அறுத்துவிடுவேன்’ என்று தவறாக

பேசிவிட்டதாக அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம் அளித்திருக்கிறார்.

இனிமேல் பேசாமல் இருந்தால் சரி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழக அரசியல்

To Top