Connect with us

தமிழ்ச் சமுதாயங்களுக்குள் உரசல் உண்டாக்கும் கருணாஸ் போன்றவர்கள் திருந்த வேண்டும்?!

தமிழக அரசியல்

தமிழ்ச் சமுதாயங்களுக்குள் உரசல் உண்டாக்கும் கருணாஸ் போன்றவர்கள் திருந்த வேண்டும்?!

தமிழ் சமுதாயம் பல சாதிகளாகப் பிளவு பட்டு கிடப்பதாலேயே
தமிழர் ஒற்றுமை கானல் நீராய் கிடக்கிறது.
இந்நிலையில் நடிகர் கருணாஸ் போன்றவர்கள் இருக்கும் ஒற்றுமையையும்
சிதைத்து விடுவார்கள் போலிருக்கிறது.
சமீபத்தில் அவர் உதிர்த்ததாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட
வார்த்தைகள் எவரும் ஏற்றுக் கொள்ளமுடியாதது
ஒரு காவல் துறை துணை கண்காணிப்பாளரை
நீ சட்டையை கழற்றி விட்டு வா என்கிறார்.

பத்திரிகைகளை நாடாரும் பார்ப்பனர்களும் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கிறார்கள் என்று பேசுகிறார்
நீங்களாவது உங்களை சேர்ந்தவர்களாவது
பத்திரிகை நடத்த வேண்டாம் என்று யாராவது தடுத்தார்களா?
மருத்துவர் ராமதாஸ் சொல்லுவதுபோல்
பெரும்பான்மை வன்னியர்கள் இல்லை
முக்குலத்தோர் தான் பெரும்பான்மை என்கிறார்.

எப்போது இந்த சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினார்கள்
அவரவரும் சொல்லிக் கொள்வதற்கு என்ன ஆதாரம்?
கவுண்டர் ஒருவர் முதல் அமைச்சர் ஆனது
சின்னம்மா போட்டது என்கிறார் – ஏன் இதுவரை
அவரிடம் இவர் ஒட்டிகொண்டிருக்கிறார்
இந்த பேச்செல்லாம் எந்த வகையில் இப்போதைய தேவை
என்ன சொல்ல வருகிறார் கருணாஸ் ?
எல்லாம் சொல்லி விட்டு எச் ராஜாவைப் போல்
இதனால் எல்லாம் யார் மனதாவது புண்பட்டிருந்தால்
அதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார்.

தமிழ் சமுகத்தின் சாபக்கேடு தகுதி இல்லாதவர்கள்
எல்லாம் தலைவர்களாக பாவித்துக்கொண்டு பேசுவதுதான்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சேர்த்து வைத்த
நல்ல பெயரை எல்லாம் அவருக்குப் பின் வந்த
எவரும் தக்க வைக்க வில்லை
சட்ட மன்ற உறுப்பினர் என்ற ஒரு தகுதியை தவிர
வேறு தகுதி ஏதும் கருனாசுக்கு இருப்பதாக தெரியவில்லை
அடுத்து வருவாரா என்பது நிச்சயமில்லை
இவரது பேச்சுக்கு மற்றவர் எவரும் பதில் கூறி
இருக்கும் ஒற்றுமையை கெடுக்க வேண்டாம்
பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க இன்னும்
யாரார் எல்லாம் என்னென்ன பேசுவார்களோ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழக அரசியல்

To Top