Connect with us

பாலியல் புகார் கொடுத்த மாணவிக்கு ஆதரவாக சக மாணவிகள் ஏன் இல்லை?

தமிழக அரசியல்

பாலியல் புகார் கொடுத்த மாணவிக்கு ஆதரவாக சக மாணவிகள் ஏன் இல்லை?

திருவண்ணாமலை அடுத்த வாழவச்சானுரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில்
இரண்டாம் படிக்கும் ஒரு மாணவி உதவி பேராசிரியர் ஒருவர் தனக்கு பாலியல்
தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்தார். அதில் தான் தங்கியிருந்த விடுதியின் காப்பாளர்கள் இரண்டு பேராசிரியைகள் அந்த உதவி பேராசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் புகார்கூறினார். சாதாரணமாக ஒரு மாணவி புகார் கூறினால்
சக மாணவ மாணவிகள் அவர் பக்கம் இருந்து போராட வேண்டும்.

ஆனால் இங்கே குற்றம் சாட்டப் பட்டவர்கள் உதவி பேராசிரியர்கள் என்பதால் அவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு மாணவ மாணவிகளை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு பாதிக்கப் பட்ட மாணவிக்கு எதிராக செயல்பட வைத்திருக்கிறார்கள்.
அந்த மாணவி வகுப்புக்குள் சென்றவுடன்
மற்ற மாணவ மாணவிகளை அழைத்துக் கொண்டு
உதவி பேராசிரியர்கள் வெளியேறி இருக்கிறர்கள்.

அந்த மாணவி வகுப்புக்குள் இருந்தால்
பாடம் எடுக்கமாட்டோம் என்று உறுதியாக சொல்லி இருக்கிறார்கள்.
இது என்ன வகை வன்முறை?. உதவி பேராசிரியர்கள் இப்படி செய்யலாமா?
சக மாணவிகள் என்ன செய்திருக்க வேண்டும்?
ஒன்று மாணவியின் புகார் பொய் என்பது அவர்கள் நிலைப்பாடாக இருந்தால்
அவர்கள் அந்த மாணவியை கூப்பிட்டு
பொய் புகாரை திரும்ப பெற சொல்லியிருக்க வேண்டும்.
புகார் உண்மையாக இருந்தால்
மாணவியின் பக்கம் நின்று
குற்றம் செய்த உதவி பேராசிரியர்கள் தண்டிக்கப் பட உதவியிருக்க வேண்டும்.

பலவகை அழுத்தங்கள் தரப்பட்ட நிலையில்
புகார் கொடுத்த மாணவியை திருச்சி நாவலூர் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை
கல்லூரிக்கு மாற்றப்பட்டு
குற்றம் சாட்டப்பட்ட இரண்டு உதவி பேராசிரியர்களும்
திருவள்ளூர் கோவை என்று மாற்றம் செய்யப் பட்டிருக்கிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட உதவி பேராசிரியர் பணி இடைநீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்.
எல்லாம் சரி. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாற்றம் செய்யப் பட்டால் பொருள் இருக்கிறது.

குற்றம் சுமத்திய மாணவி ஏன் மாற்றம் செய்யப் பட வேண்டும். ?
உதவி பேராசிரியர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு
நிர்ப்பந்தம் செய்தால் நிர்வாகம் பணிந்து விடுவதா?
அந்த மாணவி வேறு கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என்று கூறிவிட்ட நிலையில்
எப்படி நிர்வாகம் நிர்பந்திக்க முடியும்.
வகுப்பெடுக்க மறுத்த பேராசிரியர்கள் மீது
ஏன் நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயங்க வேண்டும்?
உதவிபேராசிரியர்கள் தவறுக்கு துணை போகிறார்களா என்றால்
சக பணியாளர் மீது அக்கறை எனலாம்.
ஆனால் மாணவ மாணவிகள்
ஏன் சக மாணவியை புறக்கணிக்க வேண்டும்?
அரசு கல்லூரி என்பதால் அரசுதான் பதில் கூற வேண்டும்?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழக அரசியல்

To Top