Connect with us

செம்மரம் வெட்டியதாக ஆந்திராவில் மேலும் ஒரு தமிழ்த் தொழிலாளி காவல் துறையால் சுட்டுக் கொலை?

தமிழக அரசியல்

செம்மரம் வெட்டியதாக ஆந்திராவில் மேலும் ஒரு தமிழ்த் தொழிலாளி காவல் துறையால் சுட்டுக் கொலை?

ஆந்திர காவல் துறையின் ரத்த தாகம்
இன்னும் அடங்க வில்லை போல் தெரிகிறது.
முன்பே 23 தமிழ் த் தொழிலாளிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
அந்த விசாரணையே இன்னும் முற்றுப் பெறவில்லை.
நேற்று மீண்டும் ஒரு தமிழ்த் தொழிலாளி – காமராஜ்
செம்மரம் வெட்டியதாக சுட்டுக் கொல்லப் பட்டார்
எத்தனை எச்சரிக்கை களும் பலன் அளிக்க வில்லை.

ஏன் என்றால் வேலையில்லாதவர்கள் மத்தியில்
ஒரு நாளைக்கு சில ஆயிரங்கள் கூலி கொடுக்கிறோம்
என்று கூவி அழைக்கும் போது சபலத்துக்கு
அடிமையாகி இன்று சடலமாக கிடக்கிறார்கள்.
சம்பவம் நடத்து இரவில் என்பதால்
காவல் துறை சொல்வதுதான் எடுபடும்.
ஏன் காலுக்கு கீழே சுட வில்லை என்று கேட்பதா?
ஏன் வேலைக்கு அழைத்து வந்தவர்கள் மீது வழக்கில்லை
என்று கேட்பதா?

ஆயிரக்கணக்கானவர்கள் விசாரணையின்றி ஆந்திராவில்
சிறையில் வாடுகிறார்களே?
அவர்களை மீட்க ஜெயலலிதா
முன்பு ஒரு திட்டம் அறிவித்தார்.
திமுக தனது வழக்கறிஞர் அணியையே அனுப்பியது .
தொடர்கிறதே காவல் கொலைகள் ?
தமிழக அரசு மௌனம் காக்கிறதே?
அவர்களுக்கு ஒரு பங்கும் இல்லையா?
இது தமிழ்-தெலுங்கர் பிரச்னையாக உருமாறும்
அபாயமும் இருக்கிறது இல்லையா?
அதனை தடுக்க இரு அரசுகளுக்கும் கடமை உண்டு.
பக்கத்து மாநிலங்களில் வசிக்கும்
தமிழர் நலன் காக்க ஒரு துறையே வேண்டும் போல் இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழக அரசியல்

To Top