Connect with us

அரசு ஊழியர் அருந்ததி சமூக சமையல்காரர் சமைத்தால் கௌண்டர் வீட்டு பிள்ளைகள் சாப்பிட மாட்டார்களா?

தமிழக அரசியல்

அரசு ஊழியர் அருந்ததி சமூக சமையல்காரர் சமைத்தால் கௌண்டர் வீட்டு பிள்ளைகள் சாப்பிட மாட்டார்களா?

சத்துணவு அமைப்பாளராக அருந்ததி சமூக பெண் பாப்பாள் 2006  ம் ஆண்டிலிருந்து சத்துணவு திட்ட ஊழியராக சமையல் வேலை செய்து வருகிறார்.

அப்போதே கந்தம்பாளையம் , வையாபுரி கவுண்டன் புதூர்  திருமலை கவுண்டன் பாளையம் போன்ற ஊர்களிலும் பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை.

பிறகு ஒச்சாம்பளையம் பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்திருக்கிறார்.

பிறகு திருமலை கவுண்டன் பாளையம் ஊருக்கு மாறுதல் செய்யப் பட்டிருக்கிறார். அங்கு பணியில்  சேர்ந்தவுடன் பணியில் தொடர அந்த ஊர் மக்கள் ஆட்சேபம் தெரிவித்தி ருக் கிறார்கள்.

பெற்றோர் ஆட்செபித்தவுடன் அவரது பணியிட மாற்றத்தை ரத்து செய்திருக்கிறார் வட்ட வளர்ச்சி அதிகாரி.

பிறகு திமுக இந்திய கம்யுனிஸ்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  கண்டன குரல் எழுப்பியவுடன் மீண்டும் அதே பணிக்கு  அதே ஊரில் நியமிக்கப் பட்டிருக்கிறார்.

தீண்டாமை , அரசு ஊழியர் பணியில் எவ்வளவு தூரம் ஊடுருவி இருக்கிறது என்பதற்கு இது ஒரூ அடையாளம்.

ஒரு கவுண்டர் சொல்கிறார்.  ‘ வேறு ஊரிலிருந்து எந்த தலித் பெண்மணியை நியமித்தாலும் ஏற்றுக் கொள்வோம்.  இவர் வேண்டாம். ‘    அதாவது வெளி  ஊர் தலித்தை ஏற்றுக் கொள்கிற கவுண்டர் உள்ளூர் தலித்தை ஏற்றுக்  கொள்ள மாட்டாராம்.

320   கவுண்டர் குடும்பங்களுக்கு இடையே     70 அருந்ததியர் குடும்பங்கள் வசிக்கின்றன.

இத்தகைய இழிவு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக சொல்கிறார்கள்.

இது ஏதோ தனித்த நிகழ்வல்ல.    தொடர் ஆதிக்க மனநிலை.

இதை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து சென்று இந்த ஆதிக்க மனோபாவத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையம் திருப்பூர்  மாவட்ட  ஆட்சியர் காவல் துறை கண்காணிப்பாளர் போன்றோரை  அழைத்து விசாரித்து மேல் நடவடிக்கை இருக்கிறது.

பெரியார் மண் இது என்று மார் தட்டும் வேளையில் இது போன்ற சம்பவங்கள் தலை குனிவை ஏற்படுத்தி விடுகின்றன.

விழிப்புணர்வு இருப்பதால் தான் பணி மாறுதல் நிறுத்தப் பட்டது.  இருந்தாலும் இந்த சம்பவம் நிகழ்ந்ததுவே ஒரு அவலம்தான்.

தமிழ்நாடு அகில இந்தியாவுக்கும் வழி காட்ட இதுவே தக்க தருணம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழக அரசியல்

To Top