Connect with us

தீபா பேட்ரிக் மாதவன் அரசியலுக்கு வருகிறாராம் !!!

deepa patrick madhavan

Latest News

தீபா பேட்ரிக் மாதவன் அரசியலுக்கு வருகிறாராம் !!!

யார் வேண்டுமானாலும் தமிழக அரசியலில் நுழைந்து முதல்வர் ஆகி விடலாம் .

எம்ஜியார் – ஜெயலலிதா – இருவரின் பெயரை மட்டும் சொன்னால் போதும்.

தமிழர்களை எப்படி எடை போட்டிருக்கிறார்கள்?    மிகச்சரியாக.    இதுவரை  அப்படிதானே !!

அ தி மு க வில் தலைவர்களே  இல்லையா?

மிட்டா மிராசு ஜமீன்தார் மன்னர் காலமெல்லாம் மலையேறி விட்டாலும் ஜனநாயகத்திலும் வாரிசுகளை விட்டால் வேறு யாருமே தலைமை ஏற்க தகுதி படைத்தவர்கள் தேர்ந்தெடுக்கப் பட முடியாதா?

இது இனத்தின் இழிவு இல்லையா?

ஜல்லிகட்டு பிரச்னையில் தன்மான உணர்வைக் காட்டிய தமிழினம் இனி ஒவ்வொரு பிரச்னையிலும் அந்த உணர்வை வெளிக்காட்ட  வேண்டும்.

தீபா பெந்தேகொஸ்தே பிரிவை சேர்ந்த பாட்ரிக் மாதவனை திருமணம் செய்து கொண்டதால் தான் அய்யங்கார் பிரிவை சேர்ந்த ஜெயலலிதாவால் அதை ஏற்றுக்  கொள்ள முடியாமல் திருமணத்திலும் கலந்து கொள்ள வில்லை பின்னாலும் முக்கியத்துவம் கொடுக்க  வில்லை என்பது இப்போது  தெரிகிறது.

ஆனால் எதையும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள தீபா தயாராக இல்லையே ஏன்?

\                     சசிகலா பொறுப்பு ஏற்றது தொண்டர்கள் மத்தியில் ஏற்றுக்  கொள்ளப் பட வில்லை என்ற பிரச்சாரம் செய்யப் படுகிறது.

அதிமு கவிற்கு யார் தலைமை என்பது அவர்கள் பிரச்னை.

ஆனால் எந்த கொள்கையை யும் முன்னிறுத்தாமல் தான் உறவுக்காரி என்ற உரிமையில் மட்டுமே ஒருவர் ஒரு அரசியல் தலைமை ஏற்க முன்வருவாரெயானால் அதை  ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஜானகி முதல்வரானதும் ஜெயலலிதா முதல்வரானதும் திராவிட இயக்க கொள்கைகள் அடிப்படையிலா?

அதுதான் தமிழகத்தின் தலைவிதியா?

தொண்டர்கள் அழைக்கிறார்கள் என்கிறார்கள்.  தொண்டர்கள் கண்களுக்கு வேறு அ தி மு க தலைவர்கள் யாருமே தெரியவில்லையா?

நாட்டை நாசப்படுத்தும் வேலையை போட்டி போட்டுகொண்டு முன்னெடுப்பவர்கள் இத்தனை பேர்களா?

இவர்களுக்குள் யாருமே தங்களுக்குள் ஒருவரை ஏன் தேர்ந்தெடுக்க முடியவில்லை. ?

தமிழன் என்று  சொல்லவே வெட்கப் படுகிற நிலையை உருவாக்காதீர்கள்!

தீபாவின் சகோதரர் தீபக்  சசிகலாவின் பக்கம் .   இவர் ஜெயலலிதா பெயரில் தனிக்கட்சியா?

தமிழரையும் தமிழ்நாட்டையும்  யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கலாம் என்ற நிலை இன்னும் எத்தனை நாள் நீடிக்கும்?

ஓ பி எஸ் பிரிந்து வந்து தனி அணி கண்ட பிறகு தீபா மவுசு குறைந்திருக்கிறது.

தீபாவுக்கு அரசியலுக்கு வர உரிமை இல்லையா ? நிச்சயம் உண்டு.     அதற்கு கொள்கை ரீதியிலான காரணங்களை அவர் கூற வேண்டும்.

ஜெயலலிதா வழி என்று சொல்கிறாரே அது என்ன ஜெயலலிதா வழி?

ஊரை அடித்து உலையில் போட்டு லஞ்சம வாங்கி குவித்து வழக்குகளை சந்தித்து சிறைக்கு சென்று எல்லாரையும் அடிமைகள் ஆக்கி சர்வாதிகாரம் செய்வது தான் அரசியல் என்று கற்பித்து வாழ்ந்தவர் ஜெயலலிதா.                           அதே வழியில் யார் வந்தாலும் மக்கள் ஆதரவு கிடைக்காது!

மாணவர்களும் இளைஞர்களும் சேர்ந்து மெரினாவில் சாதித்து காட்டிய ஜல்லிக்கட்டு புகழை தீபாவை அழைத்து அழித்து விடாதீர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Latest News

To Top