கல்வி

இரண்டு தமிழ் மாணவிகளின் உயிரைப் பலி வாங்கிய ‘நீட்’ ??!!

Share

அனிதா வைத்தொடர்ந்து இந்த ஆண்டும் நீட் இரண்டு தமிழ் மாணவிகளின் உயிரை பலி வாங்கிவிட்டது.

திருப்பூர் ரிதுஸ்ரீ என்ற மாணவி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண்  பெற்றும் கூட  நீட் தேர்வில் வெறும் 69 மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வைஷா என்ற மாணவியும் இதே காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

கிராமப் புற நகர்ப்புற ஏழைகள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

முதல் 50 இடங்களில் தமிழக மாணவர்கள் யாரும் இடம் பெறவில்லை. தேர்ச்சி சதவிகிதத்தில் தமிழகம் 23வது இடத்தை பெற்றிருக்கிறது.

தமிழ்நாடு சதவிகிதம் 48.57.

2013ல் உச்ச நீதிமன்றம் இதே நீட் தேர்வை சட்டத்துக்கும் அரசியல் சட்டத்துக்கும் முரணானது செல்லாதது என்று தீர்ப்பு சொன்னது. பின்னர் ஏப்ரல் மாதம் 2016ல் தனது தீர்ப்பையே மாற்றி தீர்ப்பு சொன்னது. அதனால் தான் இன்று நீட் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் 2013ல் எந்த காரணங்களினால் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னதோ அவைகளுக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வு அல்லது பதில் இன்றும் கிடைக்கவில்லை.

              சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும்  கேள்விகளுக்கு மாநில பாடத்திட்டத்தில் படித்து தேறிய நாங்கள் எப்படி பதில் அளிக்க முடியும் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவே இல்லை. 

தமிழ்நாடு அரசு  நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு சட்டம் குடி அரசுத் தலைவரிடம் இன்னும் ஒளிந்து கிடக்கிறதே ?

அதிமுக அரசு பதில் சொல்லியே தீரவேண்டும்.

This website uses cookies.