Connect with us

சபாஷ் விஜய் சேதுபதி!! முற்போக்கு சிந்தனையாளர் என்பதை நிரூபித்தார்!!

Vijay_Sethupathi

மதம்

சபாஷ் விஜய் சேதுபதி!! முற்போக்கு சிந்தனையாளர் என்பதை நிரூபித்தார்!!

சபரிமலை பெண்கள் வழிபாடு தொடர்பாக இன்று  உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணை செய்கிறது.

எப்படித்தான் மறு பரிசீலனை செய்ய முடியும் என்பதை  பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகர் விஜய் சேதுபதி இது தொடர்பாக கருத்து சொல்லி முற்போக்கு சிந்தனையாளர்களின் பாராட்டுதல்களையும் சனாதன வாதிகளின் கண்டனங்களையும் பெற்று வருகிறார்.

”மாதவிலக்கு காலத்தில் பெண்கள் கடுமையாக வலிகளை தாங்கிக் கொள்கின்றனர். ஆணாக இருப்பது எளிது. பெண்ணாக வாழ்வது அப்படி அல்ல. அந்த வலி எப்படி வருகின்றது என்று அனைவருக்கும் தெரியும். அந்த வலியில் இருந்துதான் நாம் வந்தோம். மாதவிலக்கு தூய்மையானது அல்ல என்று யார் சொன்னது.? அது மிகவும் புனிதமானது. அந்த வலி இல்லையெனில் இங்கு ஒரு மனிதர் கூட  இருக்க முடியாது.  பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேரள முதல்வர் பினராயி விஜயன் சரியான முடிவை எடுத்துள்ளார். இதனை எதற்காக சர்ச்சை ஆக்குகின்றனர் என்று புரியவில்லை” என்று தனது புரட்சிகரமான நியாயமான கருத்தை  தெளிவாக பதிவிட்டுள்ளர்.

எதிர்க்கும் நபர்கள் அவரது கருத்தில் இருக்கும் சரி தவறை விவாதிக்காமல் அவரது படங்களை புறக்கணிப்போம் என்று பரப்புரை செய்வது எந்த வகையில் நீதி?

இப்படியான மிரட்டல்களால் உண்மை பேசுபவர்களை அடக்கி விட முடியாது.

வளரட்டும் நற்சிந்தனை!!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மதம்

To Top