Connect with us

வாவர் மசூதிக்கு பெண்கள் வரலாம் என்ற அறிவிப்பால் இந்து அமைப்புகள் ஏமாற்றம்??!!

vavar

மதம்

வாவர் மசூதிக்கு பெண்கள் வரலாம் என்ற அறிவிப்பால் இந்து அமைப்புகள் ஏமாற்றம்??!!

வாவர் மசூதிக்கு பெண்கள் வரலாம்

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் வரலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உருவம் கொடுக்க முயலும் பெண்கள் காவல் துறையால்  தடுத்து திருப்பி அனுப்பப் படுகிறார்கள்.

அதையும் மீறி இதுவரை நான்கு பெண்கள் அய்யப்ப தரிசனம் செய்து இருக்கிறார்கள்.

இடையில் பெண்கள் தரிசனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் இந்து அமைப்புகள் பெண்களை வாவர் மசூதிக்கு அழைத்து சென்று அதன் மூலம் பிரச்னையை கிளப்பி இந்து கோவிலுக்குள் பெண்களை அனுப்பும் நீதிமன்றம் மசூதிக்குள் அனுப்புமா என்ற கேள்வியை எழுப்ப திட்டமிட்டு அதற்காக பெண்களை திரட்டி வாவர் மசூதிக்கு அனுப்பி வந்தனர். காவல் துறையும் சிலரை திருப்பி அனுப்பி வந்தனர். அவர்கள் மீது மதக்கலவரம் ஏற்படுத்தும் முயற்சி உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.

பிரச்னை வேறு திசையை நோக்கி பணிப்பதை அறிந்த மசூதி நிர்வாகிகள் பிரச்னையை தெளிவுபடுத்த தீர்மானித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்கள்.

அதில்’ வாவர் மசூதியில் பல ஆண்டுகளாக பின்பற்ற பட்டு வரும் ஆச்சாரங்களில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. வாவர் மசூதிக்கு வயது வித்தியாசம் இன்றி ஆண்களும் பெண்களும் வருகிறார்கள். இங்கு வரும் பெண்கள் உட்பட பக்தர்கள் பிரார்த்தனை செய்து காணிக்கை செலுத்தி விட்டு  சபரிமலைக்கு  செல்கிறார்கள். பள்ளி வாசலுக்குள் தொழுகை நடத்தும் இடத்திற்கு பெண்கள் செல்வது கிடையாது. நல்ல எண்ணத்துடன் இங்கு வர யாருக்கும் தடையில்லை. ‘ என்று தெளிவு படுத்தியிருந்தார்கள் .

அதனால் இந்து முஸ்லிம் பிரச்னை ஏற்படுத்த முயன்ற இந்து அமைப்பினர் ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இடையில் காவல்துறையின் பாதுகாப்போடு தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா மற்றும் இலங்கை சசிகலா தவிர தற்போது மஞ்சு என்ற பெண் தான் காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் பக்தர்களோடு பக்தராக கலந்து பதினெட்டாம் படி ஏறி இருமுடி கட்டி நெய்யபிஷேகம் உட்பட சடங்குகளை செய்து சுவாமி  தரிசனம் செய்திருக்கிறார்.

இதற்கும் பரிகாரம் செய்வார்களோ? நடையை சாத்திய தந்திரிகள் மீதான விசாரணை முடிந்து அவர்களுக்கு எச்சரிக்கையோ தண்டனையோ அளித்தால் பின்பு எந்த தடையும் இருக்காது.

பாஜக ஆட்சி இருப்பதால் தீர்ப்பை செல்லாதது ஆக்கி விட முடியும் என்று நம்புகிறார்கள்.

கம்யுனிஸ்டு ஆட்சியை அகற்றும் அளவுக்கு  கூட போக பாஜக தயாராக இருக்கிறது.   அதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது என்பது வேறு.

மதவாதம் தோற்பது உறுதி.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மதம்

To Top