சட்டம்

பொய் வழக்கு போடும் போலீசார் மீது என்ன வழக்கு போடுவது?!

Share

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதாகவும் சில இடங்களில் கைது செய்வதாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன.

வயல் வெளிகளில் நின்று கொண்டு பதாகைகளை கைகளில் வைத்துக் கொண்டு நிற்பதால் யார் பாதிக்கப் பட்டார்கள் என்று வழக்கு?

அனுமதி பெறாமல் போராடுவது குற்றம் என்றால் அனுமதி மறுத்தது யார் குற்றம்? 

மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவது ஆதிக்க நாடுகளில் வழக்கம் தான்.  சொந்த நாட்டில்? சொந்த நாட்டிலேயே அந்நியமாகிப் போனோமா?

அரசின் உரிமை மக்களின் கடமை என்பதெல்லாம் தாண்டி எந்த வகையில் போராடும் மக்கள் குடம் இழைக்கிறார்கள்? இதுதான் கேள்வி?

வழக்குப் போட்டு முடக்குவதுதான் அரசின் திட்டம் என்றால் அதற்கு காவல் துறை ஒத்துழைக்க வேண்டுமா?

முழுப் புரட்சி நடத்திய ஜெயப்பிரகாஷ் நாராயண் காவல் துறை சட்டத்திற்கு புறம்பான கட்டளைகளை நிறைவேற்ற மறுக்க வேண்டும் என்றார். 

அவசரநிலை பிரகடன காலத்தில் இந்திரா காந்திக்கு எதிராக மக்கள் கோபம் நீறு பூத்த நெருப்பாக இருந்து தேர்தலில் வெளிப்பட்டது.

காவல்துறை மக்களின் காவலனே தவிர சட்டத்தின் காவலனே தவிர ஆட்சியாளர்களின் காவலர்கள் அல்ல.

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாதம்தோறும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி இந்த பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளிவைக்க வைக்க வேண்டும்.

பொய் வழக்கு போடுவது நின்றால்தான் ஜனநாயகம் பிழைக்கும்.

This website uses cookies.