சட்டம்

உச்சநீதிமன்றத்தில் மேலும் நான்கு நீதிபதிகள் – சமூக நீதி ஆய்வு வேண்டாமா?

Share

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மேலும் நான்கு நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமித்திருக்கிறார்.

தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்ரமணியன், நீதிபதி கிருஷ்ணா முராரி, நீதிபதி ரவீந்தர பட், நீதிபதி  ஹ்ரிகேஷ் ராய் ஆகிய நால்வரும்தான் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

இவர்களில் எத்தனை பேர் உயர் குலத்தோர், பிற்பட்டோர் , தாழ்த்தப்பட்டோர்  சிறுபான்மையினர் என்ற விகிதம் இதுவரை பார்க்கப்பட்டதில்லை.

தகுதி படைத்த அனுபவம் உள்ளவர்களா என்ற அளவுகோலைக் கூட கொலிஜியம் என்ற நீதிபதிகளின் குழுதான் தீர்மானிக்கிறது.

34 இடங்களை எப்படி சமூக நீதி பார்த்து நியமிப்பது? மிகவும் கடினமான காரியம்தான்.

ஆனாலும் சமுதாயத்தின் எல்லா பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கும் அமைப்பாக உச்சநீதி மன்ற நீதிபதிகள் அமைந்திருந்தால் அப்போது தான் சமூக நீதி காக்கப்படும் நாடாக இந்திய கருதப்படும்.

This website uses cookies.