சட்டம்

அதிர்ச்சியளிக்கும் குழந்தை கடத்தல் குற்றங்கள்!

Share

சென்னை உயர் காவல்துறை துணைத்தலைவர் கொடுத்த அறிக்கையின் படி 2016-2018 ஆகிய  ஆண்டுகளில் காணாமல் போன  குழந்தைகளின் எண்ணிக்கை 9882. இதைக் கண்டுபிடிப்பதற்கு என்று anti child trafficking யூனிட் செயல்படுகிறது மாநிலத்தில் அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. அவைகளைப் பற்றி அறிக்கை உயர் நீதிமன்றம் கேட்டு இருக்கிறது, கொடுமை என்னவென்றால் 874 வழக்குகள் குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைக்க முயற்சித்ததாக விசாரணையில் நிலுவையில் இருக்கிறது.

இரண்டு வழக்குகளில்தான் தண்டனை. பத்தில் விடுதலை. 532 வழக்குகள் மூடப்பட்டு விட்டன. காவல்துறை அளித்திருக்கும் இந்த புள்ளிவிவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. சென்னை நகர போக்குவரத்து காவலர் இருக்கும்போதே வயதானவர்கள், குழந்தைகள் தெரு முனைகளில் பிச்சை  எடுப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் புகார் தெரிவிப்பது இல்லை? ஏன் வழக்கு பதிவு செய்வது இல்லை?

பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படம் சமூகத்தில் நிலவும் இந்த அவலங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. ஆனால் காவல் முறையாக செய்திருந்தால் இந்த தொடரும் அவலங்களை களைவதற்கு காவல்துறையின் நடவடிக்கைகள், கண்காணிப்புகள் போதாது. மனிதத்தை மரத்துப் போகச் செய்யும் இந்த குழந்தை கடத்தல்  குற்றவாளிகளுக்கு கடுமையான   தண்டனை தரப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் கரூரில் ஒரு 17 வயது சிறுவனை செல்போன் திருடினான் என்று குற்றம் சுமத்தி கட்டி வைத்து அடித்து கொன்று இருக்கிறார்களே? அங்கேயும் மனிதம் மரித்துப் போனதுதானே? தண்டனை கொடுக்க  காவல் துறையும் நீதி  மன்றமும் இருக்கையில்  சட்டத்தை கையிலெடுத்து தண்டித்த அந்த மிருக கூட்டத்திற்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். காவல்துறையே விரைந்து செயல்படு!

 

This website uses cookies.