சட்டம்

தமிழ் அறியாதவர்கள் தமிழ் நாட்டில் நீதிபதிகளா? டி என் பி எஸ் சி செய்யும் புதுக் குழப்பம்?!

Share

விதிமுறைகளில் எல்லாரும் தமிழ்நாட்டில் நீதிபதிகள் தேர்வை எழுதலாம் என்று இருந்தாலும் இதுவரை பிற மாநிலத்தவர் எவரும் இங்கே வந்து தேர்வு எழுதி நீதிபதி ஆக முயற்சிக்க வில்லை. அதனால் விதி இருந்தாலும் அது நடைமுறைக்கு வராததால் எந்த பிரச்னையும் எழாமல் இருந்தது.

ஆனால் இப்போது நிலைமை என்ன. ரயில்வே, அஞ்சல் துறை, வங்கித்துறை என்று எல்லாவற்றிலும் பிற மாநிலத்தவர் தமிழகத்தில் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் விதிமுறைகள் இருப்பதை சாக்கு வைத்து பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதிகள் தேர்வை பிற மாநிலத்தவரும் எழுதலாம் என்று அறிவித்து இருப்பது குழப்பத்தைதான் ஏற்படுத்தும்.

விதிகள் மாற்றப்பட வேண்டும் என்றால் அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டுமே தவிர விதியை காரணம் காட்டி பிற மாநிலத்தவர் இங்கு நீதிபதிகள்  ஆகும் வாய்ப்புக்கு வழி விடக்கூடாது.

தமிழக அரசின் நிலைப்பாடு இது பற்றி என்ன என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

எல்லா கட்சிகளும் தாங்கள் எதிர்ப்பை தெரிவித்து விட்டன. அரசு ஏன் மௌனம் காக்க வேண்டும்?

This website uses cookies.