சட்டம்

“மைலார்டு” ஒழிகிறது ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் ?!

Share

உயர்நீதி மன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகளை ‘மை லார்டு’ என்று அழைக்கும் வழக்கம் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கியது.

சுதந்திரம் அடைந்தும் இன்னும் மன்னர் காலத்து பழக்க வழக்கங்களை தொடர்ந்து கொண்டு இருப்பது கேவலம். அதுவும் மை லார்டு என்று நீதிபதிகளை அழைக்கும் வழக்கம் உயர் நீதிமன்றங்களில் சகஜம்.

சில வழக்கறிஞர்கள் மூச்சுக்கு மூன்று முறை மை லார்டு போட்டு பேசுவார்கள்.

வாதம் தொடங்கும்போதோ முடிக்கும்போதோ சொன்னால் போதும். ஆனால் விவாதித்துக் கொண்டிருக்கும்போதே அடிக்கடி மை லார்டு போட்டு பேசுவது கேட்பதற்கே என்னவோ போலிருக்கும். ஒரு சில நீதிபதிகள் அதை ரசிக்கலாம்.  பெரும்பாலானவர்கள் ரசிப்பதில்லை.

பழைமையை மதிப்பது வேறு. கண் மூடித்தனமாக எதையும் பின்பற்றுவது வேறு.

சட்டங்கள் எல்லாம் அடிக்கடி மறுபரிசீலனை செய்ய வேண்டியவை. எதுவும் நிலையானதில்லை. காலத்துக்கு காலம் மாறும். இன்னமும் தேசத்துரோக குற்ற பிரிவை பிடித்துக்கொண்டு தொங்குகிறோம் அல்லவா?

ஜெய்ப்பூரில் நீதிபதிகளே முன்வந்து இந்த வழக்கத்தை ஒழிக்க முன் மொழிந்திருப்பது பாராட்டத் தக்கது. சார் என்று அழைத்தாலே போதும் என்று அவர்கள் பரிந்துரைத்து  இருக்கிறார்கள்.

சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கறிஞர்கள் மை லார்டு ஒழிப்பு பற்றி  முடிவேடுக்க வேண்டும்.

This website uses cookies.