சட்டம்

கரை வேட்டிக்கு சண்டை போடும் சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்?!!

Share

தினகரன் கட்சிக்காரர்கள் அதிமுக-வினர் கட்டும் கரை வேட்டியை கட்டக்கூடாது என்று தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருக்கும் சட்ட அமைச்சர் சிவி சண்முகத்தின் செயல் அவர் சட்டம் தெரிந்தவர்தானா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

அரசியல் கட்சிகள் பெயரையும் கொடியையும் மட்டும்தான் பதிவு செய்கின்றன.  என்ன கலரில் உடை உடுத்தலாம் என்றோ வேட்டி கட்டலாம் என்றோ பதிவு செய்வது கிடையாது.

அதேபோல் கட்சிகள் பிளவு பிளவுப்படும்போது பொதுவான தலைவர்களின் படங்களை எல்லாரும்தான் பயன்படுத்துகிறார்கள். பெரியார் அண்ணா படங்களை திமுக அதிமுக மதிமுக தேமுதிக என எல்லா திராவிட கட்சிகளும்தான் பயன்படுத்துகிறார்கள் .

அதிமுக -அமுமுக கொடிகளே வேறுதான். திமுகவின் கருப்பு சிவப்பு கொடியைத்தான் அண்ணாவின் படத்தை மட்டும் வெள்ளையில் போட்டு  பயன்படுத்தினார் எம்ஜியார். தடுக்க முடிந்ததா?

அமைச்சர் மணிகண்டன் இதேபோல் முன்பு கரை வேட்டி கட்டினால் உருவுங்கள் என்று பேசினார். முடிந்ததா?

தமிழ்நாட்டு உரிமைகளை பாதுகாக்க வேண்டி சட்ட போராட்டம் நடத்த வேண்டிய சட்ட அமைச்சர் சட்டம் தெரியாமல் கரை வேட்டிக்கு தடை கோரி நடவடிக்கை எடுக்க நேரத்தை வீணடிப்பதும் இப்படிப்பட்ட சட்ட அமைச்சரை பெற்றிருப்பதும் தமிழர்களின் தலை எழுத்து என்று நொந்து கொள்வதை விட நாம் என்ன செய்ய முடியும்?

This website uses cookies.