உலக அரசியல்

செவ்வாயில் இறங்கியது நாசா விண்கலம் இன்சைட் ( InSight )

Share

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அனுப்பிய விண்கலம் இன்சைட்.

செவ்வாய் கிரகத்தை நோக்கி சென்ற மே மாதம் ஐந்தாம் தேதி அனுப்பிய விண்கலம் இன்று தனது இலக்கை அடைந்து புகைப்படங்களை பூமிக்கு அனுப்ப தொடங்கியது.

இறங்கியதும் எழுந்த புகைப்படலத்தில் எதுவுமே  தெரியவில்லை.

ஆனால் பின்னர் அனுப்பிய புகைப்படங்களில் தகவல்கள் தெரிந்தன என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இது எட்டாவது முயற்சியாம். முன்பெல்லாம் எதிர்பார்த்த பலன்களை தராமல் இருந்த நிலையில் இந்த முயற்சி பெற்ற வெற்றி விஞ்ஞானிகளை மகிழ வைத்திருக்கிறது.

டிசைன் தொடங்கி இறங்கியது வரை ஏழாண்டுகள் திட்டம் .

993 மில்லியன் டாலர்கள் செலவு. 2030-ல் மனிதர்களை அனுப்புவோம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் .

54.6 மில்லியன் கி மீ. மிக அருகாமையிலும் சராசரியாக   225 மில்லியன் கி. மீ  தூரத்திலும் இருக்கும் செவ்வாய் நம்மால் சிவப்புக் கிரகம் என்று அழைக்கப்  படுகிறது.

இவைகள் எல்லாம் அறிவியல் உண்மைகள். மறுக்க முடியாதவை. ஆனால் நாம் மட்டும்தான் அந்த சிவப்புக் கிரகம் அமைந்திருக்கும் நிலைகளால் மனித வாழ்வில் மாற்றங்கள் நிகழும் என நம்புகிறோம்.

அது இருக்கும் நிலை தோஷம் தரக் கூடியது என்றும் அதற்குப்  பரிகாரம் என்று சில தெய்வங்களை துதிப்பதும் சிறப்பு பூசைகள் செய்வதும் என விதிக்கப் பட்டுள்ளதாகவும் நம்புகிறோம்.

உலகத்தில் வேறு யாரும் இந்தியாவைதவிர இத்தகைய நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகமே.

அறிவியல் உண்மைகளை இந்த நம்பிக்கைகளோடு பொருந்திப் பார்த்து பிறகு எது ஏற்புடையது என்று ஏற்றுக் கொள்ளும் மனோநிலை என்று வருகிறதோ அன்றுதான் நமக்கு விடிவு காலம்.

This website uses cookies.