உலக அரசியல்

மாவீரன் பிரபாகரன் புகழ் நிலைக்கும்! ஏங்க வைக்கும் நினைவுகள்?

Share

மாவீரன் பிரபாகரனின் மாவீரர் தின உரைக்காக உலகமே காத்திருந்த காலம் ஒன்று உண்டு.

அந்த எழுச்சி உரை ஆண்டு முழுதும் வீரர்களுக்கு உணர்வு கூட்டும் உரையாக விளங்கும்.

புலிகளின் ஆட்சிக் காலம் இலங்கைத் தமிழர் வாழ்வில் வசந்த காலம். நம்மால் முடியு என்று உலகுக்கு உணர்த்திய காலம். நேர்மையான போரைத்தான் இறுதி வரை புலிகள் நிகழ்த்தினார்கள். ஒருபோதும் சிங்கள பொதுமக்களை தொட்டதே இல்லை. மாறாக சிங்கள வெறியர்கள்தான் தமிழ் குடிமக்களை சாமானியர்களை பெண்களை குழந்தைகளை கொன்று ஒழித்தார்கள்.

அஞ்சலி செலுத்துவோம். உலகம் காணா உண்மை வீரன். குடும்பத்தையே போரில் ஈடுபடுத்திய தன்னலம் கருதா தன்னிகரில்லா தலைவன்.

விமர்சனங்கள் எல்லாம் ஒருதலைப் பட்சமானவை. எப்படி இவர்களால் முடிந்தது என்ற வெறுப்பினால் விளைந்த வசைகள்.

ஆனால் தமிழ்க் குடிமக்கள் ஒருபோதும் விமர்சனங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதில்லை. தங்களுடன் வாழ்ந்து கொண்டே போரிட்ட தலைவனை அவர்கள் அறிவார்கள் தானே.

இன்று கொலைகாரர்கள் கையில் ஆட்சி வந்து விட்டது.

கோத்தபாய இந்தியாவுடன்  நாங்கள் நடுநிலை வகிப்போம் என்கிறார். நாம்தான் நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

அறவழி போராட்டம் ஒரு போதும் தோற்றதில்லை.

அறக்கடவுள் தமிழர்களுக்கு நியாயம் வழங்கியே தீரும்.

அந்த நம்பிக்கையில்

தமிழர்களின் குல தெய்வமாக வாழும்

மாவீரன் பிரபாகரனுக்கு தமிழினத்தின் இதய அஞ்சலி.

This website uses cookies.