சட்டம்

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பாளர்களுக்கு முன் ஜாமீன் கிடையாது; உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியா??!!

Share

மும்பை உயர் நீதிமன்றத்தில் சிலர் ஜிஎஸ்டி வரி தொடர்பாக தாங்கள் கைது செய்யப்படலாம் என்று முன் ஜாமீன் கேட்டனர். அதை உயர் நீதிமன்றம் அனுமதித்து ஜாமீன் வழங்கியது.

ஏனெனில் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை ஏதும் பதியப்படா நிலையில் அவர்களுக்கு பிணை பெற உரிமை உள்ளது என்று உயர் நீதிமன்றம் கருதியது.

அதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் உச்ச நீதிமன்றம் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் இருந்து வேறுபடுத்தப்பட்டு தனி வரைமுறைகளை கொண்டு இயங்குவதால் முதல் தகவல் அறிக்கை இல்லாமலேயே விசாரணை துவங்கவோ கைது செய்யவோ செய்யலாம் என்று தீர்ப்பு அளித்திருக்கிறது.

இது மத்திய அரசுக்கு மிகவும் சாதகமான தீர்ப்பு  என்பதில் சந்தேகம் இல்லை.

விசாரணை நடத்துவதிலும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதிலும் எந்த தவறும் இல்லை. ஆனால் தனி நடைமுறைகளை கொண்டிருந்தாலும் அதிலும் இயற்கை நீதி காக்கப்பட்டாக வேண்டும்.

எந்த விதிமுறையும் இயற்கை நீதிக்கு முரணாக அமைய முடியாது கூடாது.

தெலுங்கானா உயர் நீதிமன்றமும் சரக்கு சேவை வரி ஆணையருக்கு உள்ள உரிமைகளை உறுதிபடுத்தியுள்ளது.

ஆனால் எத்தகைய பொருளாதார குற்றத்தை செய்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய பிணை உரிமைகளை மறுப்பது இயற்கை நீதிக்கு உகந்ததல்ல.

This website uses cookies.