சட்டம்

நடிகை ஸ்ரீ ரெட்டி கூறும் பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் கூட தண்டிக்கத் தக்க குற்றம் ஆகுமா?

Share

நடிகை ஸ்ரீ ரெட்டி புதிதாக ஒரு நடிகர்  மீது  ஒரு புகார் கூறியிருக்கிறார்.

முன் அவர் ராகவா லாரன்ஸ்  ஸ்ரீ காந்த், சுந்தர் சி  என சிலர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.

மீ டூ இயக்கத்துக்கு அவர் வலிவு சேர்த்து வந்ததாக இருந்தது.

இப்போது அவர் கூறும் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டால் கூட அது தண்டிக்கத் தக்க குற்றமாக ஆகுமா என்பது தெரியவில்லை.

தனது முகநூலில் அவர் கூறியதாக வந்த செய்தி இதுதான்;

‘ என்னை பொதுக் கழிப்பிடம் போல் பயன் படுத்தினார்.   அந்த வலியும் காயமும் இன்னமும் ஆறவில்லை.   மனரீதியாக  கடுமையான பாதிப்புக்கு ஆளானேன் .  எனக்குத் தெரியும். அது என்னுடைய சம்மதத்துடன் தான் நடந்தது என. ஆனால் பட வாய்ப்புக்காக நான் ஒரு பிணத்தைப் போலத்தான் நடந்து கொண்டேன்.   எதையும் நான் முழு மனதுடன் ஈடுபாட்டுடன் செய்ய வில்லை.  என்னை நம்புங்கள்.  அவை எல்லாமே என் வாழ்க்கையின் மிக பயங்கரமான தருணங்கள்.  வெளிப்படையாக பேசுவது என் வாழ்க்கையை கடுமையாக பாதித்தது/  இதில் இருந்து நான் எப்படி மீண்டு வருவேன்.  இப்போது ஒரு தமிழ் ஹீரோ  எனது திரை வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார். அவர்  தெலுங்கு திரை உலகத்தினருக்கு மிகுத நெருக்கமானவர்.   அவர் ஒரு மிகப் பெரிய பெண் பித்தர். இந்த பூமியில் வாழ நான் தகுதியற்றவளா என்ன? ‘

‘ அது ‘ தன் சம்மதத்துடன் நடந்தது என்று அவரே ஒப்புக் கொண்ட பின்னர் அது எப்படி தண்டிக்கத் தக்க குற்றம் ஆகும்?

பட வாய்ப்புக்காக சம்மதித்தேன் என்பதை  எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

ஒரு விதத்தில் அவர் மீது  அனுதாபம் தான் வருகிறது.

நல்ல மனநல மருத்துவரிடம் அவர் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

சினிமா மட்டுமே வாழ வாய்ப்பல்ல. அப்படி வேண்டும் என்றால் தன் ஒப்புதல் இல்லாத எதையும் செய்யக் கூடாது. அந்த மன உறுதியை தக்க வைத்துக் கொண்டால் தவறுக்கு  எது இடம்?

குஷ்பு சொன்னதுபோல் யாரும் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட வில்லையே?

மீ டூ இயக்கத்திற்கு புது அர்த்தம் கொடுத்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.

This website uses cookies.