பத்திரிகையாளர்களை காரித்துப்பிய விஜயகாந்த் ?!! யார் பக்கம் நியாயம்?

Share

நேற்று சென்னையில் நடந்த ரத்த தான முகாம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை விஜயகாந்த் சந்தித்தார்.

2016 தேர்தலில் ஜெயலலிதா ஜெயிப்பாரா என்று ஒரு நிருபர் கேட்டார். ‘ ஜெயலலிதா ஜெயிக்கமாட்டார் என்று பதில் சொல்லிய விஜயகாந்த் பத்திரிகையாளர்களைப் பார்த்து இதே கேள்வியை ஜெயலலிதாவை பார்த்து கேட்கும் துணிச்சல் உங்களுக்கு உண்டா என்று கேட்டுவிட்டு ‘ தூ’ என்று காரித் துப்பினார்.

அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர்கள் கேள்விகளை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள். ஆனால் அதற்குப் பிறகு விழித்துக் கொண்ட அல்லது தூண்டி விடப்பட்ட பத்திரிகையாளர் சங்கங்கள் ஆங்காங்கே விஜயகாந்துக்கு எதிராக அறிக்கைகளை விட துவங்கி விட்டார்கள். மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கி விட்டது.
விஜயகாந்த் நடந்து கொண்டது தவறு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அநாகரிகமானது மட்டுமல்லாமல் அடுத்த தேர்தலில் எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு இவரை தேடி வருகையில் இவர் அதற்கு தகுதியானவர் தானா என்ற கேள்வியை இவரே எழுப்பி விட்டார்.

ஏற்கனெவே கட்சிக்கு கொள்கையும் இல்லை திட்டமும் இல்லை இது ஒரு குடும்பக் கட்சி என்று புகார் உள்ளது. அதனால்தான் இவர் குடும்பத்தை தாண்டி வேறு யாரும் கட்சியில் முக்கிய பொறுப்பில் இல்லை. எந்த பிரச்சினை குறித்தும் இவர் கட்சி சார்பில் யாரும் பேசுவதில்லை. என்ன பேசுவது என்பதில் பிரச்சினையா யார் பேசுவது என்பதில் பிரச்சினையா ? எப்படி இருந்தாலும் ஒரு அரசியல் கட்சிக்கு உரிய எந்த அம்சங்களும் இல்லாமல் ஒரு கட்சி பல ஆண்டுகளாக லாபத்தொடு நடந்து வருகிறது என்றால் அது விஜயகாந்த் கட்சியாகத்தான் இருக்கும். . இருந்தாலும் கலைஞருக்கும் ஜெயாவுக்கும் மாற்றாக ஒரு சக்தி தேவைப்பட்டபோது இவர் தெரிந்ததால் செல்வாக்கு கூடி நிற்கிறது.

தகுதியில்லாதவர்களுக்கு பதவி வந்தால் இப்படித்தான் என்றும் இவரோடு கூட்டு சேர்ந்து தவறு இழைத்து விட்டேன் என்றும் ஜெயலலிதா புலம்பினார். பல சமயங்களில் பொது இடங்களில் பலரை அடித்து கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார்.

இவ்வளவு இருந்தாலும் அவர் கேட்ட கேள்வியில் பொருள் இல்லாமல் இல்லை. ஜெயலலிதா ஆட்சியில் இத்தனை அநியாயம் நடக்கிறதே கொள்ளை நடக்கிறதே, எத்தனை பத்திரிகையாளர்கள் நியாயமாக கேள்வி கேட்டிருக்கிரர்கள்?.. விமர்சித்து எழுதி இருக்கிறர்கள்?

. பாராளுமன்றத் தேர்தலில் பண பலத்தோடு தான் வெற்றி பெற்றார் என்பது உலகம் அறிந்த உண்மை. எத்தனை பேர் பதிவு செய்தார்கள். ? தி மு க ஆட்சியில் நடக்க வில்லையா என்பதே பதிலாய் போனது. அதற்குத்தான் தண்டனை கொடுத்து வீட்டில் உட்கார வைத்தாகிவிட்டதே என்று யாரும் பதில் கேள்வி கேட்கவில்லை.
விலை போன பத்திரிகையாளர்களுக்கு எப்படி இத்தனை கோபம வரலாம்?

தகுதி இல்லாத தலைவர்களும் விலை போன பத்திரிகையாளர்களும் சேர்ந்து கொண்டு தமிழ் நாட்டை கூறு போட்டு விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

This website uses cookies.