வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசுபவரே தமிழக முதல்வராக வேண்டும்!!!!!

Share

தமிழைத் தாய் மொழியாக கொண்டிராதவர்கள் கூட தமிழக முதல்வராக முடியும் என்ற சூழ்நிலை இங்கு உள்ளது.

இது சரியா? கன்னடத்தை தாய் மொழியாக கொள்ளாதவர்கள் கர்நாடகாவில் முதல்வராக முடியுமா?
மலையாளத்தை தாய் மொழியாக கொள்ளாதவர்கள் கேரளாவில் முதல்வராக முடியுமா?
தெலுங்கை தாய் மொழியாக கொள்ளாதவர்கள் ஆந்திராவிலோ தெலுங்கானாவிலோ முதல்வராக முடியுமா?

திராவிடம் தமிழரை விழுங்கி விட்டதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
அதற்காக யாரையும் இரண்டாந்தர குடிமக்களாக வாழ வேண்டும் என்று நிர்பந்திப்பது சரியல்ல. மற்ற மாநிலங்கள் எப்படி நடந்து கொள்கிறதோ அப்படியே மட்டும்தான் இங்கும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி தவறாகும்?
உகாதிக்கு இங்கு விடுமுறை விட்டால் அங்கு தமிழ்ப் புத்தாண்டிற்கு விடுமுறை விட வேண்டும்!!! விடுகிறார்களா?

வேற்றுமையில் ஒற்றுமை என்பது தன்னை அழித்துக் கொள்வதாக இருக்க முடியாது.
ஜெயலலிதா தான் பாப்பாத்தி என்று பெருமிதத்துடன் சட்ட மன்றத்திலேயே அறிவித்தவர். அவர் தான் நான்காம் முறையும் ஆள வேண்டும் என்று துடிக்கிறார்.
விஜயகாந்த் தான் வீட்டிலும் வெளியிலும் தமிழ் தான் பேசுகிறாரா என்பதை அவர்தான் தெளிவு படுத்த வேண்டும்.

அதேபோல் தான் வைகோ . எவரையும் விட தமிழர் உரிமைக்கும் தமிழ் பாதுகாப்பிற்கும் குரல் கொடுப்பதிலும் போராடுவதிலும் முதல் நிலையில் நிற்பவர். அவர் வீட்டில் தமிழ் பேசுகிறாரா என்பது தெரியவில்லை. தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர்கள் மீதுதான் இந்தக் கேள்விகள் எல்லாம் எழுகின்றன.
நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருக்கும் இந்தக் கேள்வி தேர்தல் நேரத்தில் கொழுந்து விட்டு எரியும் என்பதில் சந்தேகமில்லை.

துணை முதல்வராக, அமைச்சர்களாக ஏனைய எந்தப் பொறுப்புகளுக்கு வந்தாலும் பிரச்னை வராது. ஆனால் தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர்கள் அல்லது அறிவித்தவர்கள் முதல்வராக வர முடிந்தால் அல்லது முயற்சித்தால் அதன்பிறகு பிரச்னைகள் பெரிதாகலாம் ???!!!!
அத்தகைய சூழ்நிலை உருவாக அனுமதிப்பவர்களை வரலாறு மன்னிக்காது.
தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்ற பாவேந்தர் பாரதிதாசனின் உரிமை முழக்கத்திற்கு உருவம் கொடுக்க வேண்டியது தமிழர்களின் கடமை.

This website uses cookies.