கேரள மதுவிலக்கு கொள்கை சரியே! உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு ??!

Share

ஐந்து நட்சத்ர ஓட்டல்களை தவிர மற்ற இடங்களில் பிராந்தி விஸ்கி விற்பதை தடை செய்து கேரள அரசு போட்ட உத்தரவு சரியே என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அரசின் கடமை குடியின் தாக்கத்தை குறைப்பது என்பதை தீர்ப்பு வலியுறுத்துகிறது. அரசியல் சட்ட பிரிவு 47 ன் படி அரசின் கடமை மதுவிலக்கை அமுல்படுத்துவது.

நாட்டின் பல பகுதிகளில் மதுவிலக்கை அமுல்படுத்துவதில் உள்ள சிரமங்களை குறிப்பிட்ட நீதிமன்றம் இருந்தாலும் அரசின் கடமை மது வின் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுப்பது என்பதை சுட்டிகாட்டியிருக்கிறது.

கள் , சாராயம் கிடைக்கும். பீர் வைன் கிடைக்கும். ஆனால் பார் கிடையாது. கடையில் வாங்கி வீட்டில் குடித்துக் கொள்ளுங்கள். இந்த ரீதியில் கட்டுப் பாடுகளை விதித்து கேரள அரசு கொள்கை வகுத்து செயல்படுகிறது. இதன் மூலம் நூறு சதம் கல்வி அறிவுள்ள மக்கள் நாட்டின் பதினான்கு சத வீத குடிகாரர்களாக இருப்பதை மாற்ற அரசு திட்டமிடுகிறது.

உச்சநீதி மன்ற தீர்ப்பு பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சிக்கும் ஒருவகையில் வழிகாட்டியாக இருக்கும். ஏப்ரல் மாதம் தொடங்கி அங்கும் மது விற்பனையில் பல கட்டுபாடுகளை விதிக்க அந்த அரசு திட்டமிட்டிருக்கிறது.

அந்தோ? தமிழகத்தில் ஏதாவது நடக்குமா என்ற ஏக்கம் பிறக்கிறதா இல்லையா?
ஜெயலலிதா அரசு செய்துகொண்டிருக்கும் மிகப் பெரிய அநியாயம் டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு வைத்து வியாபாரத்தை விருத்தி செய்வதுதான்.
உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஜெயலலிதாவின் கண்ணைத் திறக்குமா?

This website uses cookies.