ஜெயலலிதா- விஜயகாந்த் மோதலால் அசிங்கப் படும் தமிழக அரசியல்??!!!

Share

தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது ஜெயலலிதா படத்தை அகற்ற சொல்லி விஜயகாந்த் சொல்ல தொண்டர்கள் அகற்ற ஆத்திரமடைந்த அ தி மு; க வி னர் தே மு தி க பானர்களை கிழித்தெறிய தே மு தி க வினர் மீது மட்டும் வழக்குப் பதிந்தது காவல் துறை..
பல இடங்களில் தே மு தி க வினர் தாக்கப் பட்டனர். .

நிறுத்தச் சொல்லி அறிக்கை விட்ட ஜெயலலிதா , பத்திரிகையாளர்களை நோக்கி த்தூ என்று துப்பிய விஜயகாந்துக்கு எதிராக பத்திரிகையாளர் களை தூண்டிவிட்டு விஜயகாந்த் வீட்டு முன்பும் அலுவலகம் முன்பும் ஆர்பாட்டம் செய்ய அனுமதித்து சட்ட ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினர்.

இப்பொழுது ஜெயலிலிதா வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவேன் என்று விஜயகாந்த் அறிவித்து இருக்கிறார்.
ஆக நாடு வெள்ள நிவா

ரணம் , சட்ட ஒழுங்கு முறைகேடுகள் லஞ்சம ஊழல் என்று பல பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய வேளையில் தனிப்பட்ட சண்டையைப் போல் அரசியலை ஆக்கி விட்டு மக்களின் கவனத்தை பிரச்சினைகளில் இருந்து அப்புறப்படுத்தி தப்பிக்கும் உத்தி ஜெயலலிதாவுக்கு வேண்டுமானால் பயனளிக்கலாம் , விஜயகாந்துக்கு???
தமிழகத்தில் தலைப்புச் செய்தி மக்கள் பிரச்சினைகளாக இருக்க வேண்டுமா? தனி நபர் சண்டையாக இருக்க வேண்டுமா???

This website uses cookies.