Latest News

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலையில் விளையாடுகிறாரா ஜெயலலிதா?

Share

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி படுத்தி விட்டது. ஆயுள் என்றால் எத்தனை ஆண்டுகள் என்பதற்கு பலப்பல வியாக்கியானங்கள் சொல்லப் பட்டாலும் 24 ஆண்டுகளுக்கு பிறகாவது அவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆயுள் தண்டணை உறுதிபடுத்தப் பட்டதும் அதை அமைதியாக கையாளாகாமல் மத்திய அரசின் அனுமதி கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் விடுதலை செய்வேன் என்று சட்ட மன்றத்தில் ஆரவாரமாக அறிவித்து உச்ச நீதிமன்றத்தில் தடை கிடைக்க வழி செய்தார் ஜெயலலிதா. .
ஆரம்பத்திலேயே அரசியல் சட்ட பிரிவு 161 ன் படி மாநில அரசின் அதிகாரத்தை பயன் படுத்தி விடுதலை செய்திருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திருக்காது.

மாறாக குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான பிரிவுகளை பயன்படுத்த முனைந்த போதுதான் மத்திய அரசு அதில் தலையிட வழி ஏற்பட்டது.
இப்போதும் மத்திய அரசின் அனுமதி தேவையா வேண்டாமா என்ற கேள்வி உச்ச மன்றத்தின் முன்பு மறு சீராய்வு மனு நிலுவையில் உள்ளதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளகேட்டு மனு செய்வதை விடுத்து நாங்கள் முடிவேடுத்து விட்டோம் என்ன சொல்லுகிறீர்கள் என்று கடிதம் எழுதினால் மீண்டும் இது உச்ச நீதிமன்றத்துக்கு சென்று அவர்கள் சிறையில் வாடும் காலம் நீடிக்கவே உதவும்.

சட்ட சிக்கல் எதுவுமின்றி அவர்கள் விடுதலை ஆக வேண்டும் என கலைஞர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தலைமை செயலாளர் டெல்லிக்கு எழுதிய கடிதத்தை பத்திரிகை களுக்கு வெளியிட்டதுதான் சந்தேகத்தை கிளப்புகிறது.

தேர்தல் நேரத்தில் அனுதாபத்தை தேடும் நோக்கில் வெளியிட்டு அவர்கள் விடுதலை ஆகாமல் போனால் விளைவு ஜெயலலிதாவுக்கு எதிராகத் தான் போகும்.
தி மு க – காங்கிரஸ் கூட்டணி உறுதிபடுத்தப் பட்ட நிலையில் அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்த இந்த அறிவிப்பு வந்ததா என்றும் தெரியவில்லை.

அதே நேரத்தில் இதற்கு ராகுல் காந்தி மத்திய அரசு முடிவெடுக்கட்டும் என்று வெளியில் பேசுவதும் பாராளுமன்றத்தில் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக எதிர்த்து பேசுவதும் காங்கிரசுக்கு கொஞ்ச நஞ்சம இருக்கிற பெயரையும் கெடுக்கவே பயன்படும்..

This website uses cookies.