கச்சா எண்ணையை விலை வீழ்ச்சியை ஏன் இந்தியா பயன்படுத்த வில்லை ?

oil
oil

அமெரிக்க எண்ணையை உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றுமகி செய்ய முடியாமல் தவித்து வருகின்றன.

கொரொனா விளைவித்த ஊரடங்கால் உலகத்தில் பெட்ரோல் டீசல் பயன்பாடு  வெகுவாக குறைந்து  போய்  கச்சா எண்ணையை வாங்குவதற்கு ஆள் இல்லை.

உற்பத்தி செய்ததை ஸ்டாக் செய்யவும் இடமில்லை.. உற்பத்தியை நிறுத்தவும் முடியவில்லை.

கச்சா எண்ணைய் வாங்கும் நாடுகள் பணம் கொடுக்காமலே பெற்றுக்  கொண்டால்  போதும் என்பது மட்டுமல்ல  அதற்கு ஆகும் செலவையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்  என்ற அளவுக்கு அமெரிக்கா  வந்து விட்டது.

எண்ணையையும் வாங்கிக்கொண்டு  அதற்கு அமெரிக்கா பேரலுக்கு ஐம்பத்து மூன்று டாலர் பணமும் தர தயாராக இருந்து வந்த நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு  பேரல் விலை வெறும் பதினெட்டு டாலராக குறைந்து  விட்டதுதான் இன்றைய நிலை.

ஆனால் இந்த நிலைமையை இந்தியா பயன் படுத்திக் கொள்ள தயாராக இல்லை.

அப்படியே குறைந்த விலைக்கு  வாங்கினாலும் அதன் பலனை மத்திய அரசு எடுத்துக் கொள்ளுமே தவிர பொதுமக்களுக்கா  தரப் போகிறது?