எல்லை தாண்டி வந்தால் இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வோம் !!! ரணில் விக்கிரம சிங்கேவின் ஆணவப் பேச்சு???

Share
            தந்தி டி.வி. பேட்டியில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே  சொன்ன கருத்துக்கள் அவரது ஆணவத்தை வெளிப்படுத்துகிறதா ?
தமிழர்கள் இனப்படுகொலையில் இந்திய அரசின் பங்கை காட்டிக் கொடுக்கிறதா?   இந்திய அரசின் தமிழர் விரோத கொள்கையை வெளிச்சமிடுகிறதா?
            ரணில் என்ன சொன்னார்?  
    ”   ஒருவர் ஏன் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றால் நான் அவரை சுடலாம்.    சட்டம் அதை அனுமதிக்கிறது. ”
      ” போரில்  வெல்ல இந்தியா நிச்சயமாக உதவி செய்தது. ”
       ” இந்தியா இதை தொடர்ந்து மறுத்து வருகிறதே என்று கேட்கிறீர்கள்?  மறதி என்பது அரசியல்வாதிகளுக்கு மிக சாதாரணம்.”
       ”    கச்சத்தீவை நாங்கள் விட்டுத் தரப் போவதுமில்லை. ஒப்பந்தத்தில் கொடுக்கப் போவதுமில்லை. இந்தியா இதை எழுப்பப் போவதுமில்லை. இந்தியா இதை எழுப்பாது.”
            ரணில் பேசியது இலங்கையின் குரலா இந்தியாவின் குரலா என்ற சந்தேகம் தேவை இல்லை.     ஏனென்றால் அவர் பேசிய எதையும் இந்தியா மறுக்கவுமில்லை மறுக்கப் போவதுமில்லை.
          தமிழர்களின் எந்தக் கோரிக்கையையும் பரிசீலிக்கக் கூட இந்திய அரசு தயாராக இல்லை.
         பிரதமர் மோடி அங்கே சென்று என்ன  செய்ய போகிறார்?
     1987 ல் தமிழர்கள்  சார்பில் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்து செய்த ஒப்பந்தத்தை அமுல் படுத்தப் போகிறோம் என்று சென்ற இந்திய அமைதிப் படை புலிகளோடு சண்டையிட்டதால்   மடிந்த  1140 வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்.
        அமைதிப் படையாலும் சிங்கள ராணுவத்தாலும் அழிக்கப் பட்ட லட்சக்கணக்கான தமிழர்கள்தான் மனிதர்கள் என்ற கணக்கில் வர மாட்டார்களே?
      சிறிசேநாவின் புதிய அரசு வந்தும் இந்திய தமிழ் மீனவர்கள் தாக்கப் படுவது நின்ற பாடில்லை.    சிங்கள கடற்படை தாக்கியது என்றால் இந்தியக் கடற்படை எங்கே போனது என்ற கேட்க இங்கே யார் இருக்கிறார்கள்?
       புலம் பெயர்ந்தவர்கள் திரும்ப வாருங்கள் என்று அழைத்து அவர்கள் வந்தால் கைது என்ற வஞ்சகம் தொடர்கிறதே?
       வீடுகள் கட்டிகொடுக்கிறோம் , ரயில் விடுகிறோம், கலாச்சார மையம் திறக்கிறோம் , என்றெல்லாம் அறிவுப்புகள் செய்து உலக நாடுகளை திசை திருப்பி இனப்படுகொலை , போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கையை காப்பாற்ற மட்டுமே இந்தியா தொடர்ந்து முயற்சிக்கும்.     அதற்கு இந்திய முதலாளிகள் துணை நிற்பார்கள்.  அவர்களுக்கு இலங்கையில் இந்திய வணிக ஆதிக்கம் முக்கியம்.
     ஆட்சிகள் மாறலாம் , .   சிங்கள இனவெறி தொடரும்!  
இதுதான் இன்றைய நிலவரம்.
     அதிகாரப் பகிர்வு , அரசியல் தீர்வு ,இவைகளை தமிழர்களுக்கு சிங்களர்கள் தருவார்கள் என்று யாரேனும் நம்பினால் ஒன்று அவர்கள் வரலாறு தெரியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது நான் முட்டாள் என்று பெருமை பேசிக் கொள்பவர்களாக இருக்க வேண்டும்.
     ஜனநாயக வழியில் போராடியவர்களை சிங்களர்கள் கொன்றார்கள்.
    ஆயுதமெடுத்துப் போராடியவர்களையும்  இந்தியா சீனா உதவியோடு சிங்களர்கள் ஒழித்தார்கள்.
     வாழ வேண்டுமென்றால் போராடித்தான் ஆக வேண்டும்!     இந்த முறை காந்திய வழியில் !!!!
     சிங்களர்களை எதிர்த்து மட்டுமல்ல.    அந்த நரிகளிடம் காந்தியமே தோற்று விடலாம்.
    சிங்கள இனவெறியை ஊக்குவிக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கையை எதிர்த்து,    ஆயுதங்கள்  வழங்கும் சீனாவை எதிர்த்து, தமிழ் அகதிகளை அலைக்கழிக்கும் அனைத்து நாடுகளையும் எதிர்த்து , உலகமெங்கும் பரவிக் கிடக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் காந்திய வழியில் ஒன்று பட்டு போராட முன்வர வேண்டும்.
     வாய்மையே வெல்லும்!!!!!!
         

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041

This website uses cookies.