அ.தி மு.க. அரசில் -முட்டை கொள்முதலில் கோடிக்கணக்கில் ஊழல்~ குற்றம் சாட்டும் ஒப்பந்தக்காரர்!!

Share
           வேலூர் மாவட்ட முட்டை ஒப்பந்தக்காரர் எம்.ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடுத்துள்ள மனு பல முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
           தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டியால் நிர்ணயிக்கப் படும் விலைக்கு மாறாக தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்ட விதிகளுக்கு மாறாக நிபந்தனைகளை திருத்தி அனுபவம் இல்லாத முன்பே கர்நாடகா அரசால் கருப்பு பட்டியலில் வைக்கப் பட்ட இரண்டு நிறுவங்களுக்கு , உள் நோக்கத்தோடு , உரிமம் வழங்கப் பட்டிருப்பதால் அவைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதனால் ஒரு முட்டைக்கு 98  -Rs. 1.75  வரை  அதிக விலை கொடுத்ததால்  பத்து கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை மார்ச் 24 ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
          ஜெயலலிதா மக்கள் முதல்வராக இருந்து ஆட்சி செய்யும் அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் குவிய துவங்கி இருப்பது எதைக் காட்டுகிறது?
        ஆட்சியின் அந்திம காலத்தில் இருக்கும் நேரத்தில் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் முடிவிற்கு ஆட்சியாளர்கள் வந்து விட்டார்களா?
       ஊழல் வழக்கு வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு தலைவியே வந்த பிறகு தொண்டர்கள் என்ன சளைத்தவர்களா?
அதுவும் அமைச்சர் வளர்மதி தைரியத்துக்கு பேர் போனவர்!!!

This website uses cookies.