பிச்சைக்காரர்களுக்கு பாட்டுப்பாடும் வேலை தரும் மத்திய அரசு?

Share
          அரசின் திட்டங்கள் மக்களிடம் போய் சேர பிரசாரம் செய்வதற்காக நல்ல குரல் வளம் உள்ள 3000 பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து , அவர்களுக்கு தூய்மையான இந்தியா  , பெண் குழந்தைகளை காப்போம்  படிக்க வைப்போம் போன்ற திட்டங்கள் குறித்து பயிற்சி அளித்து , ரயில்களில் இவர்கள் பிரசாரம் செய்ய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம்  ஈடுபட்டுள்ளது.
           இவர்கள் பாட்டுப்பாடி பிச்சை எடுப்பார்களா?  அல்லது பாட்டு மட்டும் பாடுவார்களா?
           பிச்சை எடுக்காமல் பாட்டு மட்டும் பாடுவார்கள் என்றால் பரவாயில்லை.
           பழக்க தோஷம் காரணமாக பிச்சை எடுத்தால் அதை ஊக்குவிக்கும் குற்றத்தை மத்திய அரசு செய்வது ஆகாதா?
            நோக்கம் நல்லது என்றாலும் நடைமுறையில் பிச்சை எடுப்பதை வளர்த்தால் அது தேசிய அவமானம் என்பதில் என்ன சந்தேகம்?
           முதலில் மும்பையிலும் பின் நாடு முழுக்கவும் அமுல் படுத்த உத்தேசிக்கபட்டிருக்கும் இந்த திட்டம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ ???
          வேறு வேலை கிடைக்காமல் பாட்டுப் பிச்சைக்காரர்கள் அதிகமாகும் ஆபத்துதான் அதிகம்!!!!!
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

This website uses cookies.