ஜெயலலிதா பெற்ற நிபந்தனை அற்ற ஜாமீன்

Share
நூறு கோடி அபராதம் நான்கு ஆண்டுகள் சிறை என கடுமையான தண்டனைக்கு உள்ளான ஜெயலலிதாவுக்கு நிபந்தனைகள் அற்ற ஜாமீன் கிடைத்த போது எல்லார் மனத்திலும் எழுந்த சந்தேகம் ,இதே போல் அபராத துகை கட்டாமல் மேல்முறையீடு அல்லது ஜாமீன் மனுவை
மற்றவர்களுக்கும் உச்ச நீதி மன்றம் வழங்குமா?
ஏனைய வழக்குகளில் இதே போன்று அபராதத்தில் ஒரு பகுதி கூட கட்டாமல் மற்றவர்கள் கேட்டால் நீதிமன்றங்கள் எப்படி அணுகுவார்கள்.?
லாலு பிரசாத் துக்கு ஒரு நீதி ஜே-க்கு ஒரு நீதியா?  
டிராபிக் ராமசாமி தொடுத்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது பல சங்கடங்களை உச்ச நீதி மன்றம் சந்திக்கும் போல் தெரிகிறது.
வழக்கறிஞர் நாரிமன் மகன் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும்போது இவர் ஆஜரானது சரியா என்ற கேள்விக்கும் விடை கிடைக்கலாம் .
இதில் ஆயிரம் கோடி சம்பத்தப் பட்டுள்ளது என்றும் அபாண்டம் சுமத்தப் படுவதாக ஒரு வழக்கறிஞர் குறிப்பிட்டபோது அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்துவது குற்றம்.
ஆனால் சந்தேகத்தின் நிழல் கூட தன் மீது விழாமல் காத்துக் கொள்வதும் உச்சமீதி மன்றத்தின் கடமை.
வி.வைத்தியலிங்கம்
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


This website uses cookies.