பணம் கொடுத்தால் வாங்கிகொள்வேன்-ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Share
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்ற இளங்கோவன் அதற்கு காரணம் வாக்காளர்களுக்கு ஐந்தாயிரம் வரை பட்டுவாடா செய்ய இருப்பதை காரணமாக காட்டியவர் மேலும் சொன்னார், ” என்னிடம் கூட ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால்  வாங்கிகொள்வேன் .   ஆனால் கொடுத்தவர்களுக்கு வாக்களிக்க மாட்டேன்.” என்றார்.
   இதேபோல் டெல்லி தேர்தலில் கேஜ்ரிவால் சொல்லி விட்டு பின்பு அதை வாபஸ் வாங்கினார்.
இளங்கோவனுக்கு வேண்டுமானால் ஒரு லட்ச ரூபாய் பெரிதாக இருக்கலாம். சாதாரண குடிமகனுக்கு ஐநூரும் ஆயிரமும் பெரிது.   பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பதை இவர் கண்டிக்கிறாரா?  இல்லையா?
   இப்படியெல்லாம் பொறுப்பற்றுப் பேசும் தலைவர்களால் விளைவது கேடல்லாமல் வேறென்ன?
   ப. சிதம்பரத்தை முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் காங்கிரஸ் கட்சிக்காரன் கூட காங்கிர சுக்கு வாக்களிக்க மாட்டான் என்பதும் அவர் கூற்று.
 காங்கிரஸ் மக்களை விட்டு வெகு தூரம் சென்று விட்டது . யார் முதல் அமைச்சர் வேட்பாளர் என்று ஏன் சிரமப் படுவானேன்?

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

This website uses cookies.