அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் காப்பாற்றப்பட்டது !!! மருத்துவ மனையாக மாற்றும் ஜெ. அரசின் உத்தரவு ரத்து?! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு??!!!

Share
             ஜெயலலிதா அரசு பதவியேற்றவுடன்  கலைஞர் திறந்த அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவ மனையாக மாற்ற உத்தரவிட்டிருந்தார்.   அதை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்து வைத்திருந்தது.
                 5.4   லட்சம் புத்தகங்களுடன் மிகப் பெரிய நூலகத்தை வேண்டுமென்றே மருத்துவ மனையாக மாற்ற முயற்சித்ததே  கண்டிக்கத்தக்கது.   உடனடியாக  ஆணையர் அமைத்து பார்வையிட்டு அரசு செய்த அலங்கோலங்களை தெரிந்த பின் ஆணையர்கள் தெரிவித்து இருந்த கருத்துகளை நிறைவேற்றிட உத்தரவிட்ட நீதிபதிகள் அமுல்படுத்திய அறிக்கையை அடுத்த மாதம் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர் .
                கடந்த நான்கு ஆண்டுகளாக பராமரிப்பு எதுவும் இன்றி நூலகமே பாழ் பட்டு போய் இருக்கும் நிலையில் இனியாவது   அரசு கடமையை செய்யுமா ?  அல்லது மேல்முறையீடு செய்து தனது மக்கள் நலன் காணா வெறுப்பை உமிழுமா என்பதை இனிதான் பார்க்க வேண்டும்.
                 தேர்தல் வரும் காலம் என்பதால் மேல்முறையீடு செய்யாது  என்பதை எதிபார்க்கலாம்.
                    ஜெயலலிதா இனியாவது தன் போக்கை மாற்றிக் கொள்வாரா?
                  நீதிமன்றத்தின்  குட்டு வாங்குவது இந்த அரசுக்கு வழக்கமான ஒன்றாகி விட்டதே?!!!!

This website uses cookies.